புதிய ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, விநாயகர் உள்ளிட்ட கடவுளின் படங்களையும் அச்சடிக்க வேண்டும் என்று டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் யோசனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது :- இனி புதிதாக அச்சிடப்படும் ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் புகைப்படங்களுக்கு அருகே லட்சுமி, விநாயகர் உள்ளிட்ட கடவுள்களின் புகைப்படங்களையும் அச்சிட வேண்டும். அப்படி செய்தால் நாடு செழிப்படையும். ரூபாய் மதிப்பு சரிவதை கடவுள் படங்கள் தடுக்கும். இதனால், நாட்டின் பொருளாதார சூழ்நிலை மேம்படும்.
இதுபற்றி இன்னும் ஓரிரு தினங்களில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவேன். என்னதான் முயற்சிகள் செய்தாலும், கடவுளின் ஆசி இல்லையென்றால், நம்முடைய அந்த முயற்சிக்கு பலன் இருக்காது.அதனால், புதிதாக வெளியிடப்படும் ரூபாய் நோட்டுகளில் ஒருபுறம் மகாத்மா காந்தி உருவமும், மற்றொரு புறம் பெண் கடவுள் லட்சுமி மற்றும் கடவுள் விநாயகர் படங்கள் இடம்பெற வேண்டும்.
ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, விநாயகர் உருவங்களை அச்சடித்தால், நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்க பெரிதும் உதவும், என்று கூறினார்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.