டெல்லியில் பெய்து வரும் கனமழையினால் யமுனை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் முதல் தலைநகர் டெல்லி, இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் மற்றும் ஹரியான உள்ளிட்ட வடமாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக டெல்லிக்குள் ஓடும் யமுனை நதியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத வகையில் மிக அதிகளவாக 208 மீட்டரை தாண்டி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், டெல்லியின் பல முக்கிய இடங்கள் தண்ணீரில் மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லம் அமைந்துள்ள சிவில் லைன்ஸ் பகுதியில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதேபோல, தாழ்வான பகுதிகளிலும், குடிசைகள் நிறைந்த பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அத்தியாவசியமான தேவைகளுக்கு கூட வெளியில் செல்ல முடியாமல் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். கடும் போக்குவரத்து நெரிசல் நீடிப்பதால், மீட்பு பணிகள் மற்றும் நிவாரண பணிகளில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
நேற்றிரவு ரிங் ரோடு பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை இரவில் நீர் சூழ்ந்த நிலையில், அந்த பகுதி மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். யமுனை நதி மீது கட்டப்பட்டுள்ள பாலங்களின் இரண்டு பகுதிகளிலும் தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, வெள்ள பாதிப்பு காரணமாக டெல்லிக்கு குடிநீர் வழங்கி வரும் வஜிரபாத், சந்திரவால், ஓக்லா உள்ளிட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் பிரச்சினை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.