உயிரிழந்த மகனின் விந்தணுக்களைப் பயன்படுத்தி வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற பெற்றோருக்கு அனுமதி அளித்து டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டெல்லி: டெல்லியைச் சேர்ந்த ஒரு 60 வயது மதிக்கத்தக்க தம்பதியின் மகன் ப்ரீத் இந்தர் சிங். 30 வயதான இவர், கடந்த 2020ஆம் ஆண்டு Non-Hodgking’s Lymphoma என்ற நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது, அவரது இனப்பெருக்க காலம் கருதி, அவரது விந்தணுக்கள் பிரித்தெடுக்கப்பட்டு சேகரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அவரது மகன் அதே ஆண்டில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பின்னர், தனது மகனின் சேமிக்கப்பட்ட விந்தணுக்களை மருத்துவமனை நிர்வாகத்திடம் பெற்றோர் கேட்டுள்ளனர். அதற்கு தர முடியாது என மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது. எனவே, இது தொடர்பாக அவர்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், இறந்த ஒருவரின் விந்தணுக்களைப் பயன்படுத்துவது குறித்து எந்தவொரு சட்ட விதிகளும் அரசியல் சாசனத்தில் இடம் பெறவில்லை எனக் கூறிய நீதிபதி பிரதிபா சிங், 2002ஆம் ஆண்டு இஸ்ரேலிய வழக்கில் வாடகைத்தாய் மூலம் இறந்த மகனின் விந்தணுக்களைப் பயன்படுத்தி குழந்தை பெறுவதற்கு அனுமதி அளித்ததை சுட்டிக் காட்டினார்.
எனவே, இறந்த மகனின் விந்தணுக்களைப் பயன்படுத்த அவரது பெற்றோருக்கு அனுமதி அளித்த நீதிமன்றம், பதப்படுத்தப்பட்ட விந்தணுக்களை முறைப்படி பெற்றோரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளது. இந்த தீர்ப்பு தற்போது இந்திய அரசியல் சாசன வரலாற்றில் முக்கிய, புதுமையான தீர்ப்பாக அமைந்துள்ளது.
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
This website uses cookies.