குப்பம் அருகே உள்ள குடிப்பள்ளியில் முன்னாள் முதலமைச்சர் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தன்னுடைய குப்பம் தொகுதியில் கடந்த மூன்று நாட்களாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
ஆனால் திறந்த வாகனத்தில் சென்று மைக்கில் பேசி பொது மக்களை சந்திக்க அவருக்கு போலீசார் தடை விதித்தனர். மேலும் அவருடைய பிரச்சார வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
எனவே கடந்த மூன்று நாட்களாக பாதயாத்திரையாக சென்று பொதுமக்களை சந்திரபாபு நாயுடு சந்தித்து வந்தார்.
அவருடன் ஆயிரக்கணக்கான தெலுங்கு தேச கட்சி தொண்டர்கள், தலைவர்கள் ஆகியோரும் பாதயாத்திரையில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் குப்பம் அருகே உள்ள குடிப்பள்ளியில் இன்று பாதயாத்திரை நடத்திய சந்திரபாபு நாயுடு அங்கிருந்து கட்சி அலுவலகத்திற்கு செல்ல புறப்பட்டார்.
ஆனால் போலீசார் அவர் கட்சி அலுவலகம் செல்ல அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர். இதனால் ஆவேசமடைந்த சந்திரபாபு நாயுடு திடீரென்று தொண்டர்கள், தலைவர்கள் ஆகியோருடன் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்.
இதனால் அங்கு பெரு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பிரச்சார வாகனத்தை திருப்பி கொடுக்க வேண்டும், இது போன்ற தடை விதிக்கும் செயல்களில் மீண்டும் மீண்டும் போலீசார் ஈடுபடக்கூடாது என்பது அவருடைய கோரிக்கையாக உள்ளது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.