2024 லோக்சபா தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில், 543 தொகுதிகள் நாட்டில் உள்ளன. 272 தொகுதிகளில் வென்றால், ஆட்சியைப் பிடிக்க முடியும். இந்த நிலையில், 2024 லோக்சபா தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தேர்தல் முடிவுகள் வந்துள்ளது. அதாவது, ஆளும் பாஜக கூட்டணி 350 முதல் 400 தொகுதிகளில் வெற்றி பெறும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறிப்பட்டது.
ஆனால், தேர்தல் முடிவு வேறு விதமாக அமைந்துள்ளது. தற்போதைய, சூழலில் பாஜக 235 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. கூட்டணி கட்சிகளை சேர்த்தால் பாஜகவின் கூட்டணி 294 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மாறாக இந்தியா கூட்டணிக்கு 200க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை உள்ளது. அதன்படி, காங்கிரஸ் 98 இடங்களில் மம்தா பானர்ஜியின் திரணாமுல் காங்கிரஸ் 31 இடங்களிலும் திமுக 21 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. அதை போல் அகிலேஷ் யாதவ்வின் சமாஜ்வாதி கட்சி 33 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இது தவிர பிற கூட்டணி கட்சிகளை சேர்த்து பார்த்தால் இந்தியா கூட்டணிக்கு 232 தொகுதிகள் முன்னிலையில் இருக்கிறது.
இதனால், தற்போதைய சூழ்நிலையில், மத்தியில் ஆட்சியைப் பிடிக்க எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை இல்லை. அதனால், பாஜகவும் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களும் எதிரெதிரே கூட்டணியில் இருந்து ஆட்களை இழுத்து வருவதற்கான வேலைகளை தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், தான் கிங்மேக்கராக சந்திரபாபு நாயுடு மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இத்தகைய சூழ்நிலையில் தான், சந்திரபாபு நாயுடுக்கு கர்நாடக துணை முதல்வர் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்மான டி.கே சிவக்குமார் போனில் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது, பாஜக உடனான கூட்டணியை முறித்து இந்தியா கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், அதோடு மத்தியில் ஆளும் கட்சியாக இந்தியா கூட்டணி பொறுப்பேற்கும் போது மத்திய அமைச்சரவை முக்கிய இலாக்காவை தருவதாக தெரிவித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது, டி கே சிவக்குமாறும் சந்திரபாபு நாயுடு விடம் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சந்திரபாபு நாயுடு பாஜக கூட்டணியில் இருப்பாரா இல்லாவிட்டால் இந்தியா கூட்டணிக்கு எஸ்கேப் ஆவாரா என்பது அரசியல் வட்டாரத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.