ஏழுமலையான் கோவிலில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சுவாமி தரிசனம் செய்தார்.
தமிழகத்தில் உள்ள மதச்சார்பற்ற கட்சிகளில் ஒன்று திமுக. ஆரம்பத்தில் இருந்து பெரியாரின் கொள்கை வழியில் பின்பற்றி வரும் திமுக கடவுளை வணங்குவதில்லை.
ஆனால் கருணாநிதி மறைவுக்கு பின் திமுகவின் கொள்கை காற்றில் பறந்து வருகிறது என்றே சொல்லலாம். குறிப்பாக முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி கோவில் கோவிலாக சுற்றி வருகிறார்.
அதே போல முதலமைச்சரின் குடும்ப உறுப்பினர்களும், திமுகவில் உள்ள முக்கிய அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கோவில் குளங்களுக்கு சென்று வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று காலை விஐபி தரிசனத்தில் சாமி கும்பிட்டார்.
தரிசனத்திற்கு பின் கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் அவருக்கு வேத ஆசி, தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமார் ( தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்) உடனிருந்து அமைச்சருக்கு சுவாமி தரிசனம் செய்து வைத்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.