நள்ளிரவில் சோதனை ஏன்? பாஜகவுக்காக வேலை செய்கிறீர்களா? என்ஐஏவுக்கு மம்தா பானர்ஜி கேள்வி!
மேற்கு வங்காளத்தின் கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் கடந்த 2022-ம் ஆண்டு பூபதிநகர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த வழக்கை என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது. என்ஐஏ குழு இன்று காலை சோதனை நடத்தியபோது பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர்.
இதில் அதிகாரி ஒருவர் காயம் அடைந்தார். இருந்தபோதிலும் பாலை சரண் மெய்தி மற்றும் மனோப்ரதா ஜனா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐந்து இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, உள்ளூர் மக்கள் அவர்களை தாக்க தொடங்கினர். உள்ளூர் காவல் நிலையத்தில் என்ஐஏ புகார் அளித்துள்ளனர்.
இந்த நிலையில் என்ஐஏ பா.ஜ,கவுக்காக வேலை செய்வதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து மம்தா பானர்ஜி கூறியதாவது, என்ஐஏ அதிகாரிகள் ஏன் நள்ளிரவில் சோதனை நடத்தினார்கள்? அவர்களுக்கு போலீஸ் அனுமதி கொடுத்தது யார்?
நள்ளிரவில் வேறு யாராவது அந்த இடத்திற்குச் சென்றிருந்தால், உள்ளூர்வாசிகள் எப்படி கையாண்டு இருப்பார்கள். தேர்தலுக்கு முன்னதாக அவர்கள் ஏன் கைது செய்தார்கள்?.
பா.ஜ.க என்ன நினைக்கிறது?. அவர்கள் ஒவ்வொரு பூத் ஏஜென்டையும் கைது செய்ய விரும்புகிறார்களா? என்ஐஏ-யின் உரிமை என்ன? பா.ஜ.கவுக்கு ஆதரவாக அனைத்தையும் செய்து வருகிறது.
இந்த பா.ஜ.க மோசமான அரசியலுக்கு எதிராக ஒட்டுமொத்த உலகமும் போராட வேண்டும் என நாங்கள் அழைப்பு விடுக்கிறோம் என கூறினார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.