ஆந்திரா : வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காரிலிருந்து 12 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மருத்துவர் மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் காலுரு – சிப்பகிரி இடையே கல்லேவாகு நீரோடையில் காருடன் அடித்துச் செல்லப்பட்ட மருத்துவர் 12 மணி நேரத்திற்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டு உயிருடன் மீட்கப்பட்டார்.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. திடீர் மழை காரணமாக ஏரிகள் குட்டைகள் நிரம்பி பல்வேறு பகுதிகளில் உள்ள நீரோடையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று கர்னூல் மாவட்டம் காலுரு – சிப்பகிரி இடையே கல்லேவாகு நீரோடையில் ஒட்டியுள்ள சாலையில் கார் ஒன்று சென்றுகொண்டிருந்தபோது திடீரென மழை வெள்ளத்தில் கார் அடித்து செல்லப்பட்டது. இதையடுத்து சக வாகன ஓட்டிகள் மற்றும் உள்ளூர் மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் காரை தேடும் பணியில் ஈடுபட்டனர் இரவு நேரம் என்பதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து இன்று காலை தீயணைப்பு துறையினர் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் காரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கார் நீரோடையில் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் அடித்துச் செல்லப்பட்டு சிக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரில் இருந்தவரை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
பெங்களூரிலிருந்து ஆதோனி மீதாக குல்பர்கா சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவித்த காரில் சிக்கியிருந்த மருத்துவர் டாக்டர் ஷாகித் அன்சாரி பத்திரமாக மீட்ட பேரிடர் மீட்பு குழு படையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு நன்றி தெரிவித்தார்.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.