நாயை பலாத்காரம் செய்த காமக்கொடூரன் ; தலைநகரில் நடந்த அசிங்கம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!!

Author: Babu Lakshmanan
27 February 2023, 1:51 pm
Quick Share

பொதுவெளியில் தெரு நாயுடன் நபர் ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் குறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் ஆங்காங்கே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக, தலைநகர் டெல்லியில் அதிகளவில் குற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இப்படியிருக்கையில் டெல்லியில் பூங்கா ஒன்றில் நாயை ஒருவர் பலாத்காரம் செய்யும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரிநகர் பகுதியில் உள்ள பூங்காவில் தெருநாயை நபர் ஒருவர் பலாத்காரம் செய்வதை அவ்வழியாக சென்ற ஒருவர், அந்த நபருக்கே தெரியாமல் தனது செல்போனில் அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்திற்கு சமூக நல ஆர்வலர்களும், விலங்குகள் நல ஆர்வலர்களும் அந்த காமக்கொடூரனை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மேலும், இது தொடர்பாக அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில், 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.

Views: - 456

0

1