குஜராத் மக்கள் சுதந்திரத்திற்கு பின்னர் செய்த தவறை மீண்டும் செய்யாமல் பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர செய்ய வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஆமதாபாத், குஜராத் மக்கள் சுதந்திரத்திற்கு பின்னர் செய்த தவறை மீண்டும் செய்யாமல் பாஜகவினை மாநிலத்தில் மீண்டும் ஆட்சியில் அமர செய்ய வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்தில் தேர்தல் பேரணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி பேசியதாவது: நாடு 100வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும்போது வலிமையான இந்தியாவை உருவாக்க குஜராத்தில் பாஜக ஆட்சியில் இருக்க வேண்டும்.
இந்த குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த 5 ஆண்டுகளுக்கு யார் ஆட்சியில் இருக்கப் போகிறார்கள் என்பதற்கான தேர்தல் மட்டும் கிடையாது.
இந்தியா 75 சுதந்திர தினத்தை நிறைவு செய்துள்ளது. 100வது சுதந்திர தினத்தைக் கொண்டாட இன்னும் 25 ஆண்டுகள் உள்ளன. இந்தத் தேர்தலில் ஆட்சி அமைப்பது என்பது அடுத்த 25 ஆண்டுகளுக்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கான தேர்தல்.
சர்தார் படேல் முதல் பிரதமராக இருந்திருந்தால் நாடு வேறு ஒரு திசையில் பயணித்திருக்கும் என அனைவரும் கூறுகின்றனர். நாங்கள் முன்பே இருந்தவர்கள் செய்த தவறை திருத்தும் முயற்சியை ஏற்கனவே தொடங்கி விட்டோம். அதற்கான கடின முயற்சியில் இறங்கியுள்ளோம். இந்தியா சுதந்திரம் அடைந்த போது செய்த அதே தவறை நாங்கள் செய்ய முடியாது என்றார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.