அரசு அதிகாரி கொலை வழக்கில் அதிரடி திருப்பம்… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கார் ஓட்டுநர் : விசாரணையில் பகீர்!!
கர்நாடக அரசின் சுரங்கம் மற்றும் புவியியல் துறையில் துணை இயக்குநராக பொறுப்பு வகித்து வந்தவர் பிரதிமா.
நேற்று முன்தினம் அலுவலகம் முடிந்து வீட்டிற்கு சென்ற பிரதிமாவை இரவு 8 மணிக்கு மேல் அவரது சகோதரர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது அவரது அழைப்பை பிரதிமா எடுக்கவில்லை. இதனால் அச்சமடைந்த சகோதரர் மறுநாள் தனது சகோதரியின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு சென்ற காவல் துறையினர் தடயங்களை சேகரித்து விசாரணையை தொடங்கினர்.
இந்நிலையில் குற்றவாளி இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கொலை நடந்த 48 மணி நேரத்துக்குள் போலீசார் குற்றவாளியைக் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக கிரணை பிரதிமா பணி நீக்கம் செய்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிரண் அவரை திட்டமிட்டு கொலை செய்துள்ளார். இதை அவர் ஒப்புக்கொண்டு போலீசில் அவர் வாக்குமூலமும் கொடுத்துள்ளார்.
கொலைக்குப் பின்னர் கிரண் பெங்களூருவில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாமராஜநகருக்கு தப்பி ஓடினார். தனிப்படை அமைத்து கிரணை தேடிவந்த போலீசார் அவரை சாம்ராஜ்நகரில் கைது செய்தனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.