தெலங்கானா : ஐடி நகரமான ஹைதராபாத்தில் கஞ்சா போதையில் போலீசாரின் வாகனத்தில் மீது ஏறி அடாவடி செய்த இளைஞரால் போதை நகரமாக மாறி வருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் நகருக்கு ஒன்றுபட்ட ஆந்திராவின் ஐடி நகரம் என்ற பெயர் உள்ளது. தென்னிந்தியாவின் ஐடி நகரங்களில் முக்கிய பெயர் பெற்ற நகரம் ஐதராபாத் நகரம் ஆகும்.
அங்கு இந்திய நிறுவனங்கள் உட்பட பல்வேறு பன்னாட்டு ஐடி நிறுவனங்களும் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து செயலாற்றி வருகின்றன.
இந்த நிலையில் ஹைதராபாத் நகரம் போதைப்பொருட்களை விற்பவர்களின் கைகளில் சிக்கி போதை நகரமாக மாறி வருகிறது என்று எதிர்க்கட்சிகள் பல மாதங்களாகவே தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் நேற்று இரவு ஹைதராபாத்தில் உள்ள அபீப் நகர் பகுதியில் இளைஞர்கள் சிலர் போதையில் வீதிகளில் நடனம் ஆடுவதாகவும் அந்த வழியாக செல்பவர்கள் மிரட்டி தலைதெறிக்க ஓட செய்வதாகவும் அபிப் நகர் போலீசாருக்கு தொலைபேசி மூலம் தகவல் வந்தது.
தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் முழு போதையில் சாலையில் செல்பவர்களை மிரட்டி கொண்டிருந்த இளைஞர்கள் சிலரை மடக்கி பிடிக்க முயன்றனர். அவர்களில் பலர் தப்பி ஓடிவிட்ட நிலையில் அஜய் என்பவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
ஆனால் கஞ்சா போதையில் இருந்த அஜய் போலீஸ் பிடியில் இருந்து தப்பி போலீசார் வந்த வாகனத்தின் கண்ணாடியை அடித்து நொறுக்கினார்.
பின்னர் அந்த வழியாக சென்று கொண்டிருந்த சில வாகனங்கள் மீதும் கற்களை வீசி தாக்கினர். தொடர்ந்து சாலையில் சென்று கொண்டிருந்த போலீஸ் வாகனம் மீது பாய்ந்து ஏறி அட்டகாசத்தில் ஈடுபட்டார்.
சற்று நேரத்தில் அஜயை மடக்கி பிடித்த போலீசார் அபிப் நகர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் ஹபீப் நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.