தெலங்கானா : ஐடி நகரமான ஹைதராபாத்தில் கஞ்சா போதையில் போலீசாரின் வாகனத்தில் மீது ஏறி அடாவடி செய்த இளைஞரால் போதை நகரமாக மாறி வருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் நகருக்கு ஒன்றுபட்ட ஆந்திராவின் ஐடி நகரம் என்ற பெயர் உள்ளது. தென்னிந்தியாவின் ஐடி நகரங்களில் முக்கிய பெயர் பெற்ற நகரம் ஐதராபாத் நகரம் ஆகும்.
அங்கு இந்திய நிறுவனங்கள் உட்பட பல்வேறு பன்னாட்டு ஐடி நிறுவனங்களும் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து செயலாற்றி வருகின்றன.
இந்த நிலையில் ஹைதராபாத் நகரம் போதைப்பொருட்களை விற்பவர்களின் கைகளில் சிக்கி போதை நகரமாக மாறி வருகிறது என்று எதிர்க்கட்சிகள் பல மாதங்களாகவே தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் நேற்று இரவு ஹைதராபாத்தில் உள்ள அபீப் நகர் பகுதியில் இளைஞர்கள் சிலர் போதையில் வீதிகளில் நடனம் ஆடுவதாகவும் அந்த வழியாக செல்பவர்கள் மிரட்டி தலைதெறிக்க ஓட செய்வதாகவும் அபிப் நகர் போலீசாருக்கு தொலைபேசி மூலம் தகவல் வந்தது.
தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் முழு போதையில் சாலையில் செல்பவர்களை மிரட்டி கொண்டிருந்த இளைஞர்கள் சிலரை மடக்கி பிடிக்க முயன்றனர். அவர்களில் பலர் தப்பி ஓடிவிட்ட நிலையில் அஜய் என்பவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
ஆனால் கஞ்சா போதையில் இருந்த அஜய் போலீஸ் பிடியில் இருந்து தப்பி போலீசார் வந்த வாகனத்தின் கண்ணாடியை அடித்து நொறுக்கினார்.
பின்னர் அந்த வழியாக சென்று கொண்டிருந்த சில வாகனங்கள் மீதும் கற்களை வீசி தாக்கினர். தொடர்ந்து சாலையில் சென்று கொண்டிருந்த போலீஸ் வாகனம் மீது பாய்ந்து ஏறி அட்டகாசத்தில் ஈடுபட்டார்.
சற்று நேரத்தில் அஜயை மடக்கி பிடித்த போலீசார் அபிப் நகர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் ஹபீப் நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…
தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…
ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…
கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…
நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…
This website uses cookies.