ஜவுளிக்கடைக்கு சென்று விட்டு திரும்பிய 28 வயது இளம்பெண்ணின் ஆடைகளை நீக்கி நிர்வாணமாக நிற்க வைத்த போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு ஆந்திர மாநிலம் ஐதராபாத் ஜவகர் நகர் பகுதியில் இருக்கும் துணிக்கடையில் இருந்து 28 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வெளியே வந்துள்ளார். அப்போது, அந்த வழியில் மதுபோதையில் மாரய்யா (38) என்பவர் நின்று கொண்டிருந்தார்.
அவர் அந்த இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் கோபமடைந்த இளம்பெண், மாரய்யாவை தாக்க முற்பட்டார். பதிலுக்கு ஆத்திரமடைந்த மாரய்யா, இளம் பெண்ணின் ஆடைகளைக் கிழித்து நிர்வாணமாக்கினார்.
அப்போது அந்த வழியாக பைக்கில் சென்ற பெண் ஒருவர் இந்த சம்பவத்தை கண்டு வாலிபரை தடுக்க முயற்சித்தார். அவரையும் வாலிபர் தாக்கினார்.
இதனிடையே, பாதிக்கப்பட்ட இளம்பெண் தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சியம் குடிபோதையில் இருந்த மாரய்யா, அவரை சுமார் 15 நிமிடங்களுக்கு மேலாக நடைபாதையில் நிர்வாணமாக நிற்க வைத்தார். அதோடு, பாலியல் தொந்தரவும் கொடுத்தார். இதனை தடுக்காமல் அங்கிருந்த பொதுமக்கள் வேடிக்கை மட்டுமே பார்த்தனர். யாரும் அந்த பெண்ணுக்கு உதவ முன் வரவில்லை.
இதையடுத்து, போதை ஆசாமி அங்கிருந்து கிளம்பியதும், சிலர் அருகில் இருந்த பிளக்ஸ் பேனர்களை எடுத்து அந்த இளம்பெண்ணை மூடினர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தி, மாரய்யாவை கைது செய்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.