என்னை அடித்த போலீசார் உயிருடன் இல்லை என்று குடிபோதையில் வாலிபர் மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழக எல்லையை ஒட்டிய கேரள மாநிலத்திற்குட்பட்ட வெள்ளறடா பகுதியை சேர்ந்த சைவின் என்பவரை போலீசார் திருட்டு வழக்குகளில் கைது செய்தனர். திருச்சூர் நகரில் உள்ள சில வீடுகளில் திருடச் சென்றபோது பிடிபட்டார். குடும்பத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், அவரை கையும் களவுமாக பிடித்தனர்.
திருச்சூர் மாவட்ட மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. போதையில் இருந்த திருடன் சைவின், காவல்துறை அதிகாரிகளை கொன்று விடுவதாக மிரட்டல் விடுத்தார். வெளியே வந்தால் காவல்துறை அதிகாரிகளை கொன்று விடுவதாக மிரட்டினார்.
“என்னை அடித்த போலீஸ்காரர்கள் யாரும் உயிருடன் இல்லை சார். உண்மையாக, யாரும் உயிருடன் இல்லை. திருவனந்தபுரத்தில் ஒரு இடம் உண்டு. விழிஞ்ஞம் காவல் நிலையத்திற்கு சென்று திரும்பி வரவே இல்லை. எத்தனை போலீசார் கொல்லப்பட்டனர்?,” இவ்வாறு வீர வசனம் பேசினார், குழந்தைகளே, விளையாடாதீர்கள், நீங்கள் வீட்டில் இருக்க மாட்டீர்கள், என சவால் விட்டார்.
மறுநாள் போதை இறங்கியவுடன், போலீசிடம் மன்னிப்பு கேட்டார். திருச்சூர் கிழக்கு ஸ்டேஷன் போலீசார், அந்நியன் திரைப்படத்தில் விக்ரமின் கதாபாத்திரமான ‘அன்னியன், அம்பி’ ஆகிய இரு வேறு தோற்றம் கொண்ட ஒருவனை பார்த்தனர். அவர் குடிபோதையில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
போலீஸ் முன், பணிவுடன் இருந்த சைவின், மது போதையில் இருப்பதாக கூறி கதறி அழுதார். அந்த வீடியோவில், தான் குடிபோதையில் இருப்பதாகவும், ஒருவரைக் கொல்லும் தைரியம் தனக்கு இல்லை, என்றும் அந்த இளைஞர் கூறுவதைக் காணலாம். திருட்டு முயற்சி வழக்கு பதிவு செய்த போலீசார், குற்றவாளியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.