மதரஸா இடிக்கப்பட்டதால் பதற்றம்.. பற்றி எரியும் மாவட்டம் : வன்முறையாளர்களை கண்டால் சுட உத்தரவு.. ஊரடங்கு அமல்!

மதரஸா இடிக்கப்பட்டதால் பதற்றம்.. பற்றி எரியும் மாவட்டம் : வன்முறையாளர்களை கண்டால் சுட உத்தரவு.. ஊரடங்கு அமல்!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹல்த்வானி நகரின் கபூர் பஸ்தி, தோலக் பஸ்தி, இந்திரா நகர், பான்புல்புரா ஆகிய பகுதிகளில் சுமார் 4000க்கும் அதிகமான இஸ்லாமிய குடும்பங்கள் ஏறத்தாழ 100 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

ஆனால் இவர்கள் வசித்து வரும் பகுதி ரயில்வே துறைக்கு சொந்தமானது என திடீரென கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரகாண்ட் நீதிமன்றம் அறிவித்தது.

அதுமட்டுமல்லாது ஒரு வாரத்திற்குள் அனைவரும் இந்த இடத்தை விட்டு காலி செய்ய வேண்டும் என்றும், செய்யாவிடில் வலுக்கட்டாயமாக காலி செய்யப்படுவீர்கள் எனவும் எச்சரித்தது.

இதனை எதிர்த்து இப்பகுதி மக்கள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர். இந்த மனு விசாரணையில் இருக்கிறது. இந்நிலையில், சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறி இப்பகுதியில் உள்ள மதராஸாவை புல்டோசர் கொண்டு இடித்தது.

நகராட்சி ஆணையர் பங்கஜ் உபத்யாய் முன்னிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆண்டாண்டு காலமாக வசித்து வரும் பகுதியில் இருக்கும் மதராஸாவை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் மக்கள் ஒன்று திரண்டனர்.

அப்போது வாக்குவாதங்கள் எழுந்த நிலையில், அது கைகலப்பாக மாறியது. காவல்துறையினர் மீதும், நகராட்சி ஊழியர்கள் மீதும் அப்பகுதி மக்கள் கற்கள் வீசி தாக்கியதாகவும், எனவே கண்ணீர் புகை குண்டு வீசி அவர்களை கலைத்ததாகவும் காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட வன்முறையில் தற்போது வரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். ஏராளமான வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டிருக்கிறது.

வன்முறையாளர்களை கண்டதும் சுட காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல வன்முறை மேலும் பெரியதாக வெடிக்காமல் இருக்க அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

அப்பகுதியில் இயங்கி வரும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் வேண்டும் என்றே மதராஸா இடிக்கப்பட்டதாக அப்பகுதிகள் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆனால், முன்கூட்டியே நோட்டீஸ் கொடுத்த பின்னர்தான் ஆக்கிரமிப்புகளை அகற்றினோம் என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் சொல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

1 day ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

1 day ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

1 day ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

1 day ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

1 day ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

1 day ago

This website uses cookies.