முதலமைச்சருக்கு நெருக்கமானவர்களின் வீடு, அலுவலகங்களில் ED சோதனை.. அமலாக்கத்துறை ரெய்டால் நெருக்கடி?!!

முதலமைச்சருக்கு நெருக்கமானவர்களின் வீடு, அலுவலகங்களில் ED சோதனை.. அமலாக்கத்துறை ரெய்டால் நெருக்கடி?!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் சட்ட விரோதமாக சுரங்கம் நடத்தி பல ஆயிரம் கோடி வரி ஏய்ப்பும், முறைகேடுகளும் செய்து இருப்பதாக புகார்கள் எழுந்தன.இதையடுத்து நடந்த விசாரணையில் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் சுரங்க முறைகேடுகளில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்திருப்பதாக அமலாக்கத்துறை அறிவித்தது.

அதன் அடிப்படையில் ஹேமந்த்சோரனிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் அதை அவர் ஏற்கவில்லை. ஆனால்
அமலாக்கத்துறையினர் தொடர்ந்து 7 முறை சம்மன் அனுப்பியது.

இதனால் கடுப்பான ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறை மூலம் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக குற்றம்சாட்டினார். தன் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தால் அது ஜார்க்கண்ட் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என்றும் கூறினார்.

இந்த நிலையில் ஹேமந்த் சோரன் கட்சியை சேர்ந்த மூத்த எம்.எல்.ஏ. ஒருவர் பதவி விலகினார். ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டால் அவரது மனைவியை முதலமைச்ராக்க வழிவகை செய்யும் வகையில் அந்த எம்.எல்.ஏ. பதவி விலகி இருப்பதாக தகவல்கள் வெளியானது.

ஆனால் இதை ஹேமந்த் சோரன் மறுத்தார். பாஜகவின் கற்பனை நாடகம் இது என்று கூறினார். இதற்கிடையே இன்று அமலாக்கத் துறை அதிகாரிகள் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

தலைநகர் ராஞ்சியில் 10 இடங்களில் சோதனை நடந்தது. ராஜஸ்தான் மாநிலத்திலும் சோதனை நடந்து வருகிறது. இன்று சோதனை நடந்து வரும் இடங்கள் அனைத்தும் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு தொடர்புடைய இடங்கள் ஆகும்.

எனவே ஹேமந்த் சோரனை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையில் இன்றைய சோதனையை அமலாக்கத்துறை மேற்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஹேமந்த் சோரன் மீது பிடியை இறுகச்செய்து இருக்கும் அமலாக்கத்துறை அடுத்தகட்ட விசாரணைகளிலும் ஈடுபட்டுள்ளது.

ராஞ்சியில் இன்று ஹேமந்த் சோரனுக்கு நெருக்கமானவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. ஹேமந்த் சோரனின் பத்திரிகை ஆலோசகர் அபிஷேக் பிரசாந்தும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டார்.

ஜார்க்கண்ட் மாநிலம் கசரிபாக் நகரில் உள்ள போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திர துபே என்பவரின் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் முறையிட்டு சோதனை நடத்தி வருகிறார்கள். கலெக்டர் ராம்நிவாஸ் வீட்டிலும் சோதனை நடக்கிறது.

இன்று சோதனை நடக்கும் இடங்களில் பெரும்பாலான இடங்கள் ஜார்க்கண்ட் சுரங்கத்துறை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இடைத்தரகர்களின் வீடுகளாகும். இவர்கள் அனைவரும் ஹேமந்த் சோரனுக்கு மிக மிக நெருக்கமானவர்கள்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

2 days ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

2 days ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

2 days ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

2 days ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

2 days ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

2 days ago

This website uses cookies.