இரவு விருந்தை தடுக்க அமலாக்கத்துறை போட்ட திட்டம் : கார்கே உடனான விசாரணை குறித்து காங்கிரஸ் கருத்து!!

டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு கட்டிடத்தில் இருந்து அமலாக்க இயக்குனரகத்தின் விசாரணை முடிந்து காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புறப்பட்டு சென்றுள்ளார்.

நேஷனல் ஹெரால்டு நிதி முறைகேடு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரிடம் அமலாக்கத்துறை அலுவலர்கள் பல்வேறு கட்டங்களாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கடந்த 2-ந் தேதி, டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு தலைமை அலுவலகத்தில் உள்ள யங் இந்தியா நிறுவனத்தில் அமலாக்கத்துறை அலுவலர்கள் சோதனை நடத்தினர்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி யங் இந்தியா நிறுவனத்தின் முதன்மை அலுவலரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.
அதன்படி, இன்று நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் அமலாக்கத்துறை அலுவலர்கள் முன்பு மல்லிகார்ஜுன கார்கே ஆஜரானார் இதுபற்றி காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் இன்று பேசும்போது, மல்லிகார்ஜுக கார்கேவிடம் 6.5 மணிநேரங்களுக்கும் மேலாக விசாரணை நடந்து வருகிறது.

நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு நடுவே அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இது வருத்தத்திற்குரியது. அவர், எதிர்க்கட்சிகளின் துணை ஜனாதிபதி வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவுக்கு இரவு 7.30 மணியளவில் இரவு விருந்து கொடுக்கும் முடிவில் இருந்துள்ளார்.

இது தெளிவான துன்புறுத்தல், அனைத்து மாநிலங்களிலும், பணவீக்கம், வேலை வாய்ப்பின்மை மற்றும் உணவு பொருட்கள் மீது ஜி.எஸ்.டி. விதிப்பு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி நாளை பேரணியாக செல்கிறது.

அதற்கு முன்பு மோடி அரசால் நடத்தப்படும் நாடகமிது என்று கூறியுள்ளார். இதற்காக, சோனியா காந்தியின் இல்லம் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகத்திற்கு வெளியே நேற்று பாதுகாப்பு படை வீரர்கள் பலர் குவிக்கப்பட்டனர் என்று கூறியுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.