அமலாக்கத்துறை இயக்குநரின் 3வது முறை பதவி நீட்டிப்பை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.
அமலாக்கத்துறை இயக்குநராக இருந்து வரும் சஞ்சய் மிஸ்ராவுக்கு இரண்டு முறை பதவி நீட்டிக்கப்பட்டது. அவரது பதவிக்காலம் வரும் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், 3வது முறையாக அவருக்கு மத்திய அரசு பதிவு நீட்டிப்பு வழங்கியது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. அமலாக்கத்துறை இயக்குநரின் மூன்றாவது கால நீட்டிப்பை உச்சநீதிமன்றம் செல்லாது என்று தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் விடுத்துள்ள பதிவில், அமலாக்கத்துறை மீதான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து மிகவும் மகிழ்ச்சியடைய வேண்டாம். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் மகிழ்ச்சி அடைந்தவர்கள் பல்வேறு காரணங்களுக்காக குழப்பத்தில் உள்ளனர்.
ஆனால், அவர்கள் மகிழ்ச்சி அடைய தேவையில்லை. சிவிசி சட்டத்தில் திருத்தம் நாடாளுமன்றத்தில் முறையாக நிறைவேற்றப்பட்டது. அதை நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. ஊழல் செய்பவர்கள் மற்றும் சட்டத்தின் தவறான பக்கத்தில் செயல்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறையின் அதிகாரங்கள் அப்படியே இருக்கும்.
அமலாக்கத்துறை என்பது அனைவருக்கும் மேலானது ஆகும். பணமோசடி குற்றங்கள் மற்றும் அந்நியச் செலாவணி சட்டங்களை மீறுதல் ஆகியவற்றை விசாரிப்பதற்கான அதன் நோக்கத்தை அது தொடர்ந்து தொடரும். அமலாக்கத்துறை இயக்குனர் யார் என்பது முக்கியமில்லை, ஏனெனில் இந்த பதவியில் இருப்பவர்கள் வளர்ச்சிக்கு எதிரான மனநிலை கொண்ட ஊழல்வாதிகளை தொடர்ந்து கண்காணிப்பார்கள், எனக் கூறினார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.