மாநிலங்களவையில் எதிர்கட்சியினரின் தொடர் அமளிக்கிடையே பிரதமர் மோடி உரையாற்றினார். நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றினார்.
அவர் பேசிய போது எதிர்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர். அவர்களை அமைதி காக்கும்டி சபாநாயகர் அறிவுறுத்திய போதும், எதிர்கட்சியினர் தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர்.
இந்த நிலையில் எதிர்கட்சியினரின் அமளிக்கிடையே பிரதமர் மோடி தனது பேச்சை தொடர்ந்தார்.
அப்போது அவர் பேசியதாவது, மாநிலங்களவையில் பல மூத்த உறுப்பினர்கள் இந்த சபைக்கு வழிகாட்டியிருக்கிறார்கள். இங்கு நடக்கும் விஷயங்களை நாடு மிகவும் ஆர்வத்தோடு உற்று நோக்குகிறது.
துரதிர்ஷ்டவசமாக இந்த அவையில் சிலருடைய குரல், இந்த நாட்டிற்கும், இந்த சபைக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது. எதிர்கட்சியினருக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
நீங்கள் எவ்வளவு தான் சேற்றை வாரி இறைத்தாலும், சேற்றில் தான் தாமரை மலரும். பாஜக அரசு செயல்பட கூடிய அரசு என மக்கள் நம்புகிறார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லம்மாள்(65), அவரது மகள் காளீஸ்வரி (45), காளீஸ்வரியின் மகள்…
ஆர்யாவுக்குச் செந்தமான உணவகங்கள் தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக கதாநாயகனாக வலம் வருபவர் ஆர்யா. தொடக்கத்தில் பல திரைப்படங்கள் அவரது…
நடிகர் ஆர்யா ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கத்தில் வெளியான உள்ளம் கேட்குமே படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். என்னதான் அந்த படத்தில்…
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
This website uses cookies.