வீட்டில் வெடித்த குண்டு: கொல்லப்பட்ட முன்னாள் MLA மனைவி:போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணை….!!

மணிப்பூர் சாய்குல் மாவட்டத்தின் முன்னாள் எம்எல்ஏ மனைவி மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் உள்ள அவர் வீட்டில் வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்ததில் இறந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.59 வயதான முன்னாள் MLA மனைவி சாருபாலா ஹாக்கிப், மெய்தே சமூகத்தைச் சேர்ந்தவர்.

64 வயதான முன்னாள் எம் எல் ஏ யம்தோங் ஹாக்கிப் இரண்டு முறை சாய்குல் தொகுதியில் வெற்றி பெற்றார் – 2012 மற்றும் 2017 இல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார்.கணவன் மனைவி இருவரும் 2022 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பாஜகவுக்கு மாறினர்.

குண்டு வெடிப்பு சம்பவம்,வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடந்ததாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார், ஆனால் சனிக்கிழமை அதிகாலையில் புகார் அளிக்கப்பட்டது.

வீட்டில் உள்ள குப்பைகளுக்கு மத்தியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு ஒன்று வைக்கப்பட்டிருந்ததாக அவர் கூறினார். குப்பைகளை எரித்தபோது, அது வெடித்துள்ளது.இதனால் முன்னாள் எம்எல்ஏ மனைவி உயிரிழந்தார். மற்ற அனைவரும் நலமாக உள்ளதாகவும் வேறு உயிரிழப்புகளோ, காயங்களோ இல்லை,” எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

முன்னாள் எம்.எல்.ஏ. தனது மாமாவின் பேரன் ஒருவருக்கு அருகில் உள்ள நிலத்தை வாங்கியதால் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப் படுவதாக போலீசார் தெரிவித்தனர்.

Sudha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.