மத்தியபிரதேச மாநிலம் சித்ஹி மாவட்டத்தில் சாலையோரம் அமர்ந்திருந்த பழங்குடியின தொழிலாளியான தஷ்ரத் ரவத் மீது ஒரு நபர் சிறுநீர் கழித்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் பழங்குடியின தொழிலாளர் மீது சிறுநீர் கழித்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் பர்வேஷ் சுக்லா என்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து பர்வேஷ் சுக்லாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், அவரின் வீட்டின் ஒரு பகுதியை அதிகாரிகள் புல்டோசர் கொண்டு இடித்தனர்.
இதனிடையே பாதிக்கப்பட்ட பழங்குடியின தொழிலாளியை மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகார் தனது இல்லத்திற்கு வரவழைத்து அவரது பாதங்களை கழுவி மன்னிப்பு கோரியதோடு, இந்த விவகாரத்தில் குற்றவாளி மீது தேசியபாதுகாப்பு சட்டம் பாயும் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பர்வேஷ் சுக்லா தனது தவறை உணர்ந்து விட்டதாகவும், அவரது தவறுக்காக ஏற்கனவே தண்டிக்கப்பட்டு விட்டதாகவும் பாதிக்கப்பட்ட பழங்குடியின தொழிலாளி தஷ்ரத் ரவத் தெரிவித்துள்ளார். மேலும் பர்வேஷ் சுக்லா தங்கள் கிராமத்தின் பண்டிதராக இருப்பவர் என்றும், அவரை அரசு மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.