மத்தியபிரதேச மாநிலம் சித்ஹி மாவட்டத்தில் சாலையோரம் அமர்ந்திருந்த பழங்குடியின தொழிலாளியான தஷ்ரத் ரவத் மீது ஒரு நபர் சிறுநீர் கழித்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் பழங்குடியின தொழிலாளர் மீது சிறுநீர் கழித்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் பர்வேஷ் சுக்லா என்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து பர்வேஷ் சுக்லாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், அவரின் வீட்டின் ஒரு பகுதியை அதிகாரிகள் புல்டோசர் கொண்டு இடித்தனர்.
இதனிடையே பாதிக்கப்பட்ட பழங்குடியின தொழிலாளியை மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகார் தனது இல்லத்திற்கு வரவழைத்து அவரது பாதங்களை கழுவி மன்னிப்பு கோரியதோடு, இந்த விவகாரத்தில் குற்றவாளி மீது தேசியபாதுகாப்பு சட்டம் பாயும் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பர்வேஷ் சுக்லா தனது தவறை உணர்ந்து விட்டதாகவும், அவரது தவறுக்காக ஏற்கனவே தண்டிக்கப்பட்டு விட்டதாகவும் பாதிக்கப்பட்ட பழங்குடியின தொழிலாளி தஷ்ரத் ரவத் தெரிவித்துள்ளார். மேலும் பர்வேஷ் சுக்லா தங்கள் கிராமத்தின் பண்டிதராக இருப்பவர் என்றும், அவரை அரசு மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.