மேடையில் பாடிக் கொண்டிருந்த பிரபல பாடகி மீது துப்பாக்கிச்சூடு… அதிர்ந்து போன திரையுலகம்..!!!

Author: Babu Lakshmanan
1 June 2023, 9:36 pm
Quick Share

மேடையில் பாடிக் கொண்டிருந்த பிரபல பாடகி மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் கார் பசந்த் கிராமத்தில் வசித்து வருபவர் பிரபல போஜ்புரி பாடகி நிஷா உபாத்யாய். நகரில் நடக்கும் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகளில் பாடல்களை பாடி வருகிறார். இவர் பீகாரின் பாட்னா நகரில் நடந்த கலாசார நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

அப்போது, ஆடல், பாடலுடன் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது, பலரும் மேடையை நோக்கி பணமழை பொழிந்தனர். அந்த சமயம் பாடகி நிஷா உபாத்யாய் மீது கூட்டத்தில் இருந்த நபர், திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில், அவரது இடது தொடையில் காயம் ஏற்பட்டு உள்ளது. இதுபற்றிய வீடியோ ஒன்று சமூக ஊடகத்தில் பரவி வைரலாகி வருகிறது.

இதையடுத்து, அவர் மீட்கப்பட்டு பாட்னாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் அவரது நிலைமை சீரடைந்துள்ளது. இதுபற்றி அவர் போலீசில் புகார் எதுவும் அளிக்காத நிலையில், நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு நடந்தது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 352

0

0