திரைப்பட நடிகை ஜீவிதா ராஜசேகருக்கு மோசடி வழக்கில் ஜாமீனில் வெளிவர இயலாத வாரன்ட் பிறப்பித்து நகரி நீதிமன்றம் உத்தரவு.
தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து புகழ்பெற்ற நடிகர் ராஜசேகர். அவருடைய மனைவி தான் நடிகை ஜீவிதா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு பி.எஸ்.வி கருடா வேகா என்ற பெயரிலான தெலுங்கு திரைப்படம் திரைக்கு வந்தது. அந்த திரைப்படத்தில் ராஜசேகர் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் பி.எஸ்.வி கருடா வேகா சினிமாவை தயாரித்த ஜோ ஸ்டார் சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஹேமா நகரி காவல்நிலையத்தில் ஜீவிதா மீது பணமோசடி புகார் ஒன்றை அளித்தார்.
அந்த புகாரில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நிலம் மற்றும் தேனியில் 20 ஏக்கர் நிலம் என அவர்களுக்கு சொந்தமாக இருக்கும் நிலத்தை அடமானமாக வைத்து பட தயாரிப்புக்காக 26 கோடி ரூபாய் பணம் பெற்றுக்கொண்டனர்.
தற்போது அந்த நில பத்திரங்கள் தொலைந்து விட்டதாக ஹைதராபாத் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்து அதே நிலத்தை சென்னையைச் சேர்ந்த சுதாகர் ரெட்டி என்பவருக்கு விற்பனை செய்ததாகவும் ஜீவிதா பணத்தை திருப்பி கொடுக்காமல் தங்களை ஏமாற்றி விட்டதாக புகாரில் தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக நகரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையை ஏற்று கொண்ட நீதிமன்றம் ஜீவிதா மீது ஜாமீனில் வெளிவர இயலாத வாரண்ட் பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக திருப்பதியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஹேமா, ஜீவிதா ராஜசேகர் ஆகிய இரண்டு பேரும் மிகவும் நல்லவர்கள் போல் சமூகத்தில் நடமாடி கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் எங்களிடம் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்காத காரணத்தால் நாங்கள் தொழில் நடத்த இயலாத நிலையில் இருக்கிறோம். ஜீவிதாவை நம்பவே கூடாது. வழக்கில் ராஜசேகர் விரைவில் சிறைக்கு செல்வார் என்று கூறினார்.
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
This website uses cookies.