பிரபல மலையாள நடிகையும், தொலைக்காட்சி தொகுப்பாளருமான சுபி சுரேஷ் (42) பிப்ரவரி இன்று காலை காலமானார். சுபி சுரேஷ் கல்லீரல் பிரச்சனையால் ஆலுவாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதற்கிடையில் நிமோனியா காய்ச்சலால் அவரது உடல்நிலை மோசமடைந்தது இதை தொடர்ந்து அவர் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்ரபட்டு சிகிச்சை பெற்று வந்தார்.சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் காலமானார்.
சுபி சுரேஷ் நகைச்சுவை நடிகையாக அறிமுகமானார்.
தொடர்ந்து ஒரு சில மலையாளப் படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்து உள்ளார். எர்ணாகுளம் மாவட்டம், திரிபுனித்துராவில் பிறந்தார். அப்பா சுரேஷ், அம்மா அம்பிகா, அண்ணன் ஏபி சுரேஷ். தந்தை ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். சுபி சுரேஷ் சினிமாலா என்ற நகைச்சுவைத் தொடரின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.
தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் பல நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். வெளி நாடுகளிலும் பல மேடை நிகழ்ச்சிகளில் நகைச்சுவை வேடங்களில் நிகழ்த்தப்பட்டுள்ளன.
சூர்யா டிவியில் குழந்தைகளுக்கான குட்டிப்பட்டாளம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் சுபி. 2006ஆம் ஆண்டு ராஜசேனன் இயக்கிய கனக சிம்ஹாசனம் படத்தின் மூலம் சுபி சுரேஷ் திரையுலகில் நுழைந்தார். எல்சம்மா என்ற ஆண்குட்டி, பஞ்சவர்ண தத்தை, டிராமா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.