பல்வேறு இந்தி தொலைக்காட்சி தொடர்களிலும், திரைப்படங்களிலும் நடித்து மிகவும் பிரபலமானவர் 72 வயதாகும் வீணா கபூர்.
இந்நிலையில் கடந்த வாரம், வீணா கபூரை அவருடைய மூத்த மகன், சொத்து பிரச்சனை காரணமாக கொலை செய்து விட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த தகவல் சமூக வலைத்தளத்திலும் படு வேகமாக பரவிய நிலையில், இது முற்றிலும் வதந்தி என்றும், தான் உயிருடன் இருப்பதாக அவரே அறிவித்துள்ளது மட்டும் இன்றி, இதுகுறித்து வதந்தி பரப்பியவர்கள் மீது திண்டோஷி காவல் நிலையத்தில் FIR பதிவு செய்துள்ளார்.
மேலும் இந்த வதந்தி குறித்து விளக்கம் அளித்துள்ள வீணா கபூர், “இது முற்றிலும் பொய்யான தகவல், வீணா கபூர் கொல்லப்பட்டார் என்பது உண்மை தான். ஆனால், அந்த வீணா கபூர் நான் அல்ல. அது வேறு ஒரு நபர்.
தற்போது நான் ஜூகுவில் வசிக்கவில்லை. தன்னுடைய மகனுடன் கோரேகானில் வசித்து வருகிறேன். நான் என் மகனுடன் வசித்து வருவதால் அப்படி மக்கள் நினைத்து விட்டார்கள்.
அதே போல் சில செய்தி நிறுவனங்கள், உண்மை என்ன என்பதை முழுமையாக விசாரிக்காமல் வதந்திகளை பரப்பி விட்டனர். ஆனால் நான் நலமாக இருக்கிறேன். யாரும் இப்படி வெளியான வதந்திகளை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
அதே போல் இவருடைய மகனும் இந்த செய்தி தங்களை மிகவும் பதித்ததாகவும், போலீசார் தங்களுக்கு முழு ஆதரவு அளித்ததாக கூறியுள்ளார்.
மேலும் தற்போது நடிகை வீணாவின் மரணம் குறித்து அவதூறுகளை பரப்பியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திண்டோஷி காவல் நிலையத்தில் FIR பதிவு செய்து போலீசார் விசாரணையை துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
மகனால் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட நடிகை தற்போது திடீர் என நலமுடன் இருப்பதாக கூறியுள்ளது, பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை நிம்மதியடை செய்துள்ளது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.