சர்ச்சைக்குரிய இயக்குநராக வலம் வருபவர் தெலுங்கு மற்றும் இந்தி பட இயக்குநர் ராம் கோபால் வர்மா. இந்த நிலையில் ஐதராபாத்தை சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர் கோப்பட சேகர் ராஜு பாலிவுட் இயக்குனரும், தயாரிப்பாளருமான ராம் கோபால் வர்மா மீது மோசடி புகார் கொடுத்திருக்கிறார்.
ஐதராபாத் அருகே 2019-ம் ஆண்டு நடந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமை தொடர்பாக `திஷா’ என்ற பெயரில் படம் தயாரிக்க ராம் கோபால் வர்மாவிற்கு ராஜூ 2020-ம் ஆண்டு முதலில் 8 லட்சமும் அடுத்த சில நாட்களில் மேலும் 20 லட்சமும் கொடுத்தார்.
படம் வெளியாவதற்கு முன்பு பணத்தைக் கொடுத்துவிடுவதாக ராம் கோபால் வர்மா உறுதியளித்திருந்ததாக ராஜு தனது புகாரில் தெரிவித்திருக்கிறார். ஆனால் 2021-ம் ஆண்டுதான் ராம் கோபால் வர்மா படமே தயாரிக்கவில்லை என்று தெரிந்துகொண்டேன். படம் தயாரிப்பதாகக்கூறி பணம் வாங்கி ஏமாற்றிவிட்டார் என்று தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அப்புகாரின் அடிப்படையில் ஐதாராபாத் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மோசடி, நம்பிக்கையை மீறியது உட்பட பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
Upcoming Hero சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது கெரியரை தொடங்கியவர்தான் ரியோ. அந்த சமயத்திலேயே மிகப் பிரபலமான தொகுப்பாளராகவும்…
இந்த மாதம் விஜய் டிவி பிரபலங்களுக்கான மாதம் என சொல்வது போல, அடுத்தடுத்து விஜய் டிவி பிரபலங்கள் திருமணம் செய்து…
டாப் நடிகர் அஜித் படத்தில் நடிப்பது என்பது பலருக்கும் கனவே. பலரும் அஜித் படத்தில் ஒரு காட்சியிலாவது தலையை காட்டிவிட…
தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜய்க்கு மத்திய அரசு உய்ப்பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. இந்த நிலையில் அவருக்கு சிஆர்பிஎப்…
This website uses cookies.