ஆந்திரா : ஆர்ஆர்ஆர் திரைப்படம் சிறப்புக் காட்சியைக் காண இருசக்கர வாகனத்தில் வந்த ரசிகர்கள் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது,
ஆந்திர மாநிலம் வி கோட்டா மண்டலம் மற்றும் ரமகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் துர்கா (வயது 25), கங்காதர் (வயது 24), வினய் குமார் (வயது 26) ஆகியோர். தமிழ்நாட்டில் தங்கி கட்டிட வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியான நிலையில் நடிகர் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் தீவிர ரசிகர்களான இவர்கள் திரைப்படத்தை காண 2 இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு ஆந்திரா வந்துகொண்டிருந்தனர்.
வி கோட்டா மண்டலத்திலிருந்து தமிழ்நாடுக்கு செல்லும் சாலையில் பாபே பள்ளி மிட்டா என்ற இடத்தில் இரவு 12 மணி அளவில் இரு வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று உரசி மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்த ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழக்க மற்ற மூன்றுபேரை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குப்பம் பி.இ.எஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மேலும் இரண்டு பேர் உயிரிழந்தனர். ஒருவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆர்ஆர்ஆர் படம் பார்க்க ஆவலுடன் வந்த ரசிகர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.