உணவகங்கள் தங்களுடைய ‘பில்’லில், சேவை கட்டணத்தை சேர்க்க கூடாது என, உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
உணவகங்களில், வலுக்கட்டாயமாக சேவை கட்டணத்தை சேர்த்து பில் போடுவதாக, பலதரப்புகளிலிருந்தும் புகார்கள் வருகின்றன.
இந்த நிலையில் அமைச்சகம், உணவக பிரதிநிதிகளுடன் நேற்று பேச்சு நடத்தியது. இதன் தொடர்ச்சியாக, அமைச்சர் பியுஷ் கோயலிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, உணவக உரிமையாளர்கள், ஊழியர்களுக்கு ஊதியத்தை அதிகரிக்க விரும்புகின்றனர் எனில், உணவு விலையை ஏற்றிக் கொள்ளட்டும். அதற்கு எந்த தடையும் இல்லை. உணவுக்கான விலையை அவர்களே நிர்ணயித்துக் கொள்ளலாம்.
இதற்கு நாட்டில் எந்த கட்டுப்பாடும் கிடையாது. ஆனால், அதற்கு பதிலாக, சேவை கட்டணம் எனும் பெயரில், அதை நுகர்வோரிடம் திணிப்பது சரியாகாது. உரிமையாளர்கள், ஊழியர்களுக்கான ஊதியத்தை உயர்த்திக் கொள்ளவோ, அல்லது உணவுக்கான விலையை அதிகரித்துக் கொள்ளவோ தடை எதுவும் இல்லை. ஆனால், மறைமுக விலை இருந்தால், உண்மையான விலையை எப்படி அறிய முடியும்?
சேவையில் திருப்தி ஏற்பட்டால், நுகர்வோர் ‘டிப்ஸ்’ தருகின்றனர். அதை தொடர்வதில் ஒன்றும் இல்லை.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இதற்கிடையே, அமைச்சகம் தரப்பில், நியாயமற்ற இந்த கட்டண வசூலிப்பை தடுக்க, உரிய சட்டம் வெளியாகும் எனக் கூறப்பட்டு உள்ளது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.