உணவகங்கள் தங்களுடைய ‘பில்’லில், சேவை கட்டணத்தை சேர்க்க கூடாது என, உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
உணவகங்களில், வலுக்கட்டாயமாக சேவை கட்டணத்தை சேர்த்து பில் போடுவதாக, பலதரப்புகளிலிருந்தும் புகார்கள் வருகின்றன.
இந்த நிலையில் அமைச்சகம், உணவக பிரதிநிதிகளுடன் நேற்று பேச்சு நடத்தியது. இதன் தொடர்ச்சியாக, அமைச்சர் பியுஷ் கோயலிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, உணவக உரிமையாளர்கள், ஊழியர்களுக்கு ஊதியத்தை அதிகரிக்க விரும்புகின்றனர் எனில், உணவு விலையை ஏற்றிக் கொள்ளட்டும். அதற்கு எந்த தடையும் இல்லை. உணவுக்கான விலையை அவர்களே நிர்ணயித்துக் கொள்ளலாம்.
இதற்கு நாட்டில் எந்த கட்டுப்பாடும் கிடையாது. ஆனால், அதற்கு பதிலாக, சேவை கட்டணம் எனும் பெயரில், அதை நுகர்வோரிடம் திணிப்பது சரியாகாது. உரிமையாளர்கள், ஊழியர்களுக்கான ஊதியத்தை உயர்த்திக் கொள்ளவோ, அல்லது உணவுக்கான விலையை அதிகரித்துக் கொள்ளவோ தடை எதுவும் இல்லை. ஆனால், மறைமுக விலை இருந்தால், உண்மையான விலையை எப்படி அறிய முடியும்?
சேவையில் திருப்தி ஏற்பட்டால், நுகர்வோர் ‘டிப்ஸ்’ தருகின்றனர். அதை தொடர்வதில் ஒன்றும் இல்லை.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இதற்கிடையே, அமைச்சகம் தரப்பில், நியாயமற்ற இந்த கட்டண வசூலிப்பை தடுக்க, உரிய சட்டம் வெளியாகும் எனக் கூறப்பட்டு உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.