தனது கான்வாயை காட்டு யானை வழிமறித்ததால் உத்தரகாண்ட் முன்னாள் முதலமைச்சர் பாறை மீது உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத், கர்வால் மாவட்டத்திற்கு கோட்வார்-துகாடா நெடுஞ்சாலை வழியாக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, காட்டு பகுதியில் சென்று கொண்டிருந்த போது, திடீரென அவர்களின் கான்வாயை ஒற்றை காட்டு யானை வழிமறித்தது.
சிறிது நேரம் அங்கேயே உலாவிய காட்டு யானை, சற்று ஆக்ரோஷமாக காணப்பட்டது. அதுமட்டுமில்லாமல், அவர்களின் வாகனங்களை நோக்கி, அந்த காட்டு யானை ஆவேசமாக வந்தது.
இதனை பார்த்த முன்னாள் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத்தை, அவரது பாதுகாவலர்கள் அங்கிருந்த உயர்ந்த பாறையின் மீது அழைத்துச் சென்றனர். அவர்கள் பாதை மீது ஏறிய போதும், அந்தக் காட்டு யானை அவர்களை விட்டு நகரவில்லை. அங்கிருந்தவர்களை அச்சப்படுத்தும் விதமாகவே, காட்டு யானை நின்று கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாமல் மீண்டும் காட்டுக்குள்ளேயே சென்றது. ஆனால் யானையைக் கண்டு பயந்து போன அனைவரும் அங்கிருந்த உயரமான பாறையில் ஏறினர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.