காந்தி குடும்பம்… எல்லாத்துலயும் ஊழல் செய்த குடும்பம் : ராகுல் காந்தியை கடுமையாக சாடிய அசாம் மாநில முதலமைச்சர்!

காந்தி குடும்பம்… எல்லாத்துலயும் ஊழல் செய்த குடும்பம் : ராகுல் காந்தியை கடுமையாக சாடிய அசாம் மாநில முதலமைச்சர்!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை “இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை” என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 14-ம்தேதி மணிப்பூரில் இருந்து யாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி நேற்று அசாம் வந்தடைந்தார்.

அசாமில் நுழைந்தது முதல்அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவை மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன. ​​அசாம் மாநிலத்தில் யாத்திரைக்கு தலைமை தாங்கி வரும் ராகுல் காந்தி கடந்த இரண்டு நாட்களாக நடந்த பல பொதுக்கூட்டங்களில் அம்மாநில முதல்வரை “நாட்டின் மிகவும் ஊழல் நிறைந்த முதல்வர்” என்று குற்றச்சாட்டி வருகிறார்.

அசாமில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல்காந்தி “மணிப்பூரை பிரிக்கும் வேலையை பிரதமர் மோடி செய்துள்ளார். எனவே மணிப்பூரில் இருந்து இந்தப் பயணத்தை ஆரம்பித்து நாகாலாந்து சென்றோம். ​​அசாமில் அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டம் குறித்து கேள்வி எழுப்பிய அவர், எவ்வளவு பட்டம் பெற்றாலும் இங்கு வேலை வாய்ப்பு கிடைக்காது என்றார். ஊழலில் ஈடுபடுவது எப்படி என்பது குறித்து பாஜக ஆளும் மற்ற மாநிலங்களின் முதல்வர்களுக்கு சர்மாவால் கற்றுக்கொடுக்க முடியும் என கூறினார்.

அவர் அஸ்ஸாமுக்கு வேலை செய்யவில்லை, மாறாக பிரதமர் மோடி என்ன சொன்னாலும் அதைச் செய்வார். பல மாதங்களாக வன்முறை நடந்து வருவதால் மணிப்பூரில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கினேன். அங்கு மக்கள் கொல்லப்படுகின்றனர். பிரதமர் மணிப்பூருக்கு செல்லவில்லை, ஏனென்றால் அவர் அங்கு சென்றால், பாஜகவின் உண்மை அனைவருக்கும் தெரியவரும்” என கூறினார்.

காந்தி குடும்பம் என்று சொல்லப்படும் குடும்பத்தில் இருந்து வரும் எந்த ஒரு தரக்குறைவான விஷயத்தையும் நான் பாக்கியமாக கருதுகிறேன். ஏனென்றால், தன்னை மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதும் குடும்பத்தை எதிர்த்துப் போராடும் வலிமையை அது எனக்கு அளிக்கிறது.

இந்நிலையில், ராகுல் காந்தி குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, நான் ஒன்றை மட்டும் கேட்க விரும்புகிறேன், காந்தி குடும்பத்தை விட ஊழல்வாதியாக யாராவது இருக்க முடியுமா..? போஃபர்ஸ் ஊழல், நேஷனல் ஹெரால்டு ஊழல், போபால் எரிவாயு துயரம், 2ஜி ஊழல், நிலக்கரி ஊழல் போன்றவை அவர்களின் ஊழல் பட்டியலில் உள்ளது என கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.