காந்தி குடும்பம்… எல்லாத்துலயும் ஊழல் செய்த குடும்பம் : ராகுல் காந்தியை கடுமையாக சாடிய அசாம் மாநில முதலமைச்சர்!
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை “இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை” என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 14-ம்தேதி மணிப்பூரில் இருந்து யாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி நேற்று அசாம் வந்தடைந்தார்.
அசாமில் நுழைந்தது முதல்அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவை மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன. அசாம் மாநிலத்தில் யாத்திரைக்கு தலைமை தாங்கி வரும் ராகுல் காந்தி கடந்த இரண்டு நாட்களாக நடந்த பல பொதுக்கூட்டங்களில் அம்மாநில முதல்வரை “நாட்டின் மிகவும் ஊழல் நிறைந்த முதல்வர்” என்று குற்றச்சாட்டி வருகிறார்.
அசாமில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல்காந்தி “மணிப்பூரை பிரிக்கும் வேலையை பிரதமர் மோடி செய்துள்ளார். எனவே மணிப்பூரில் இருந்து இந்தப் பயணத்தை ஆரம்பித்து நாகாலாந்து சென்றோம். அசாமில் அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டம் குறித்து கேள்வி எழுப்பிய அவர், எவ்வளவு பட்டம் பெற்றாலும் இங்கு வேலை வாய்ப்பு கிடைக்காது என்றார். ஊழலில் ஈடுபடுவது எப்படி என்பது குறித்து பாஜக ஆளும் மற்ற மாநிலங்களின் முதல்வர்களுக்கு சர்மாவால் கற்றுக்கொடுக்க முடியும் என கூறினார்.
அவர் அஸ்ஸாமுக்கு வேலை செய்யவில்லை, மாறாக பிரதமர் மோடி என்ன சொன்னாலும் அதைச் செய்வார். பல மாதங்களாக வன்முறை நடந்து வருவதால் மணிப்பூரில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கினேன். அங்கு மக்கள் கொல்லப்படுகின்றனர். பிரதமர் மணிப்பூருக்கு செல்லவில்லை, ஏனென்றால் அவர் அங்கு சென்றால், பாஜகவின் உண்மை அனைவருக்கும் தெரியவரும்” என கூறினார்.
காந்தி குடும்பம் என்று சொல்லப்படும் குடும்பத்தில் இருந்து வரும் எந்த ஒரு தரக்குறைவான விஷயத்தையும் நான் பாக்கியமாக கருதுகிறேன். ஏனென்றால், தன்னை மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதும் குடும்பத்தை எதிர்த்துப் போராடும் வலிமையை அது எனக்கு அளிக்கிறது.
இந்நிலையில், ராகுல் காந்தி குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, நான் ஒன்றை மட்டும் கேட்க விரும்புகிறேன், காந்தி குடும்பத்தை விட ஊழல்வாதியாக யாராவது இருக்க முடியுமா..? போஃபர்ஸ் ஊழல், நேஷனல் ஹெரால்டு ஊழல், போபால் எரிவாயு துயரம், 2ஜி ஊழல், நிலக்கரி ஊழல் போன்றவை அவர்களின் ஊழல் பட்டியலில் உள்ளது என கூறினார்.
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
தொடர் மரணங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த “காந்தாரா” திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப்…
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகின்றனர். இதையும்…
This website uses cookies.