தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் கன்கோல் சோதனைச் சாவடியில் கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அவ்வழியாக சென்று கொண்டிருந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில் காரில் எதுவும் கிடைக்கவில்லை.
இருப்பினும் போலீசாருக்கு அந்த காரில் சந்தேகம் ஏற்பட்டு டிரைவரிடம் விசாரித்ததில் முன்னுக்கு பின் முரண்பாடான பதில் கூறியதில் சந்தேகம் வலுத்தது.
எனவே காரில் ஏதோ இருக்குமோ என்று சந்தேகத்துடன் காரில் இருந்த இருக்கைகளை எடுத்து பார்த்த போலீசாரே அதிர்ச்சி அடைந்தனர். ஒவ்வொரு இருக்கையின் கீழும் ஒரு ரகசிய பெட்டி ஏற்பாடு செய்யப்பட்டுருந்தது.
அதை திறந்து பார்த்தபோது அதில் 83.4 கிலோ கஞ்சா இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இவற்தை ஆந்திரா – ஒடிசா எல்லை மலைகிராமத்தில் இருந்து பெற்து மகாராஷ்டிராவுக்குச் கடத்தி செல்வது தெரிய வந்தது. இதனையடுத்து காருடன் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹபீஸ் என்பவரை கைது செய்து ₹ 33.50 லட்சம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கஞ்ச கடத்துவதற்காக புஷ்பா பட பாணியில் காரின் இருக்கைக்கு அடியில் ரகசிய அறையை ஏற்படுத்தி கஞ்சா கடத்தினால் யாருக்கும் சந்தேகம் வராத வகையில் மேலே இருக்கைகள் போடப்பட்டு கஞ்சா கடத்தியது போலீசாரை அதிர்ச்சி அடைய செய்தது.
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
தொடர் மரணங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த “காந்தாரா” திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப்…
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகின்றனர். இதையும்…
அனிருத்-காவ்யா மாறன் காதல்? தமிழ் சினிமாவின் டாப் இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். தற்போது விஜய்யின் “ஜனநாயகன்”, ரஜினியின் “கூலி”,…
வெளியான டிரெயிலர் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தை…
This website uses cookies.