ராஜஸ்தானில் பள்ளி மாணவியின் தண்ணீர் பாட்டிலில் மாணவர்கள் சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது.
பில்வாரா மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த வெள்ளிக்கிழமை சிலர் அசிங்கமான செயலை செய்தனர். அதாவது, வேறு சமூகத்தைச் சேர்ந்த ஒரு மாணவியின் தண்ணீர் பாட்டிலில் சில மாணவர்கள் தண்ணீருடன் சிறுநீரை கலந்து வைத்துள்ளனர். அதோடு, ஒரு காதல் கடிதத்தையும் மாணவியின் பையில் போட்டு விட்டுச் சென்றுள்ளனர்.
வகுப்பறைக்கு சென்ற மாணவி தாகத்திற்கு தண்ணீர் குடிப்பதற்காக பாட்டிலை திறந்துள்ளார். அப்போது, துர்நாற்றம் வீசியதை கவனித்த அவர், பாட்டிலில் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் கண்டுகொள்ளவில்லை.
இதைத் தொடர்ந்து, பள்ளி மீண்டும் திறந்த பிறகு காவல்நிலையம் மற்றும் தாசில்தாரிடம் புகார் அளித்த பிறகும், நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இதனால், கொதித்தெழுந்த மாணவியின் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், குற்றம் செய்த மாணவர்களின் ஊருக்குள் புகுந்து கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். தடுக்க சென்ற போலீசார் மீதும் கற்களை வீசியதால் அங்கு பதற்றம் உருவானது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்துள்ளனர். இந்த வன்முறை போராட்டம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
This website uses cookies.