செய்தியாளர்களுக்கு அனுமதி கொடுங்க… உச்சி மாநாட்டில் ஒருசேர ஒலித்த குரல் : நிராகரித்த இந்தியா.. பரபர காரணம்!!

செய்தியாளர்களுக்கு அனுமதி கொடுங்க… உச்சி மாநாட்டில் ஒருசேர ஒலித்த குரல் : நிராகரித்த இந்தியா.. பரபர காரணம்!!

தலைநகர் டெல்லியில் இன்றும் நாளையும் ஜி20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. உலகின் பவுர்புல் நாடுகள் அனைத்தும் உறுப்பினராக இருக்கும் இந்த மாநாடு சர்வதேச அளவில் முக்கியமானது. இதில் பல முக்கிய விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

இதில் கலந்து கொள்ள அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா என உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் உலக தலைவர்கள் டெல்லிக்கு வந்தனர். இதன் காரணமாக டெல்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதில் பாதுகாப்பு, அணுஆயுதம், வளரும் ஏஐ துறை எனப் பல விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதற்கிடையே இந்தக் கூட்டம் குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதாவது பைடனுடன் வந்த செய்தியாளர்களுக்கு இந்த மீட்டிங்கில் கூடுதல் அணுகல் வழங்கப்பட வேண்டும் என்று அமெரிக்க அரசு பல முறை மோடி அரசுக்குக் கோரிக்கை விடுத்ததாகவும் இருப்பினும், இதற்கு இந்தியா மறுத்துவிட்டதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

டெல்லியில் நடக்கும் நிகழ்வுகளில் ஊடகங்கள் சிறந்த அணுகலைப் பெற வெள்ளை மாளிகை தன்னால் முடிந்ததைச் செய்து வருவதாகவும் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் தெரிவித்தார்.

நேற்றைய தினம் லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமரின் இல்லத்தில் மோடி- பைடன் இடையேயான சந்திப்பு நடைபெற்றது.

பொதுவாக இதுபோன்ற சந்திப்பிற்குப் பிறகு இரு நாட்டுத் தலைவர்களும் கூட்டாகவோ அல்லது தனித்தனியாகவோ செய்தியாளர்களைச் சந்திப்பார்கள். ஆனால், இந்த முறை அதுபோன்ற செய்தியாளர் சந்திப்பு எதுவும் இல்லை. மாறாக இரு நாடுகளும் இணைந்து கூட்டறிக்கை மட்டுமே வெளியிட்டன.

அதில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தரமாக உறுப்பினராக முயலும் நிலையில் அதற்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்று பைடன் மோடியிடம் உறுதியளித்தாக கூறப்பட்டிருந்தது.

இது குறித்து அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கூறுகையில், இது வழக்கமாக ஒரு நாட்டுத் தலைவர் மற்றொரு நாட்டிற்குச் செல்லும் போது நடக்கும் சந்திப்பு இல்லை.. ஜி20 உச்சி மாநாடு நடைபெறும் நிலையில், அதன் ஒரு பகுதியாகவே இந்தச் சந்திப்பு நடந்துள்ளது. பல தலைவர்கள் அங்கு இருந்ததால் சில பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டன.

அங்கே (இந்தியாவில்) அமெரிக்க ஊடகங்களுக்குச் சரியான பத்திரிகை அணுகலை உறுதி செய்ய வெள்ளை மாளிகை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது என்பதை நான் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்” என்றார்.

அமெரிக்காவின் டாப் அதிகாரிகள் பலரும் இந்தியா அதிகாரிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு அமெரிக்க ஊடகங்களுக்குக் கூடுதல் அணுகலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், அமெரிக்க ஊடகங்களுக்கு வெறும் கூட்டறிக்கை மட்டுமே தரப்பட்டது.

இதை இந்தியா நிராகரிக்க முக்கிய காரணமே, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடி அமெரிக்கா சென்று அதிபர் பைடனை சந்தித்த பின் இருநாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்திக்கவில்லை.

ஏனென்றால் செய்தியாளர் சந்திப்பிற்கு முதலில் இந்தியா தயக்கம் காட்டியதாகவும் பின்னர் அதற்கு பதிலாக கூட்டு அறிக்கை வெளியிடலாம் என யோசனையை முன்வைத்ததாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

2 days ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

2 days ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

2 days ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

2 days ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

2 days ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

2 days ago

This website uses cookies.