ஆந்திரா : திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய பிப்ரவரி மாத தரிசன டிக்கெட் வெளியீடு குறித்து தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
திருப்பதியில் தரிசனம் செய்வதற்கான ரூ.300 சிறப்பு டிக்கெட் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் என்ற வீதத்தில் நாளை காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியாகிறது.
அதேபோல் இலவச தரிசனத்திற்காக நாள்தோறும் ரூ.10,000 டிக்கெட்டுகள் 29-ஆம் தேதி காலை 9 மணி முதல் துவங்குகிறது.
இந்த அறிவிப்பு திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. மேலும் பக்தர்கள் அனைவரும் பிப்ரவரி மாத தரிசனத்திற்கான டிக்கெட்டுகளை https://tirupatibalaji.ap.gov.in/#/login என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தரிசன டிக்கெட் முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் 48 மணி நேரத்திற்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்த ஆர்.டி.பி.சி.ஆர் சான்றிதழ் நெகட்டிவ் என்ற நிலையில் இருக்க வேண்டும் என அறிவித்துள்ளது.
மேலும்,இந்த இரு சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்று இல்லாதவர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படாமல் மலை அடிவாரத்தில் உள்ள அலிபிரி சோதனைசாவடியில் திருப்பி அனுப்பப்படுவர் என தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.