தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 9ஆம் தேதி அரசு தயாரித்துக் கொடுத்த உரையின் சில பகுதிகளை ஆளுநர் படிக்காமல் தவிர்த்ததால், அவரது உரை மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்தார்.
அவர் தீர்மானத்தை படித்துக் கொண்டிருந்தபோதே ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்தது சர்ச்சையானது.
இந்த சம்பவங்கள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய புகார் கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் சட்ட அமைச்சர் ரகுபதி, டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் சமர்ப்பித்தனர்.
அதில் ஆளுநர் வரம்பை மீறி செயல்பட்டு வருவதாகக் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்த புகார் கடிதத்தை நடவடிக்கைக்காக உள் துறை அமைச்சகத்திற்கு குடியரசுத் தலைவர் அனுப்பிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து கடந்த 13ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரெனெ டெல்லி சென்றார். தமிழ்நாடு இல்லத்தில் தங்கிய அவர், அரசு சார்ந்த எந்த நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவில்லை, யாரையும் சந்திக்கவில்லை.
தன்னுடைய உறவினர் திருமணத்தில் கலந்துகொண்டுவிட்டு உடனே சென்னை திரும்பினார். இந்த நிலையில் அவர் மீண்டும் டெல்லி வருமாறு, உள்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, புதன்கிழமை டெல்லி செல்லும் ஆளுநர், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து, தமிழ்நாடு அரசியல் சூழல் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து பேச உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…
ஆக்சன் கிங் சூர்யா? கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது.…
This website uses cookies.