மேற்கு வங்கத்தில் திரௌபதி முர்முவுக்கு பெருகும் ஆதரவு : ஊர் ஊராக ஆதிவாசிகள் ஒட்டிய போஸ்டர்!!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நிறைவடையும் சூழலில், புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற 18ந்தேதி நடக்க உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜ.க. வேட்பாளராக திரவுபதி முர்மு நிறுத்தப்பட்டு உள்ளார். எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார்.

இதனையடுத்து இருவரும் மாநிலம்தோறும் சென்று ஆதரவு திரட்டினர். ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் ஆசிரியராக தனது வாழ்க்கையை தொடங்கியவர் திரவுபதி முர்மு (வயது 64). இதன்பின்னர் ஒடிசா அரசியலில் நுழைந்து, மயூர்பஞ்சின் ராய்ரங்பூர் பகுதியின் கவுன்சிலரானார்.

பா.ஜ.க.வில் இணைந்து 2000 மற்றும் 2004ம் ஆண்டுகளில் 2 முறை எம்.எல்.ஏ.வானார். ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியின்போது மீன்வளம் மற்றும் கால்நடை வளர்ப்பு போன்ற பல்வேறு துறையின் மந்திரியாகவும் பதவி வகித்த அனுபவம் கொண்டவர்.

அவர், 1997ம் ஆண்டு பா.ஜ.க.வின் எஸ்.டி. மோர்ச்சா மாநில துணை தலைவர் பதவிக்கு தேர்வு பெற்றவர். ஜார்க்கண்டில் 5 ஆண்டுகள் பதவி காலம் (2015 முதல் 2021 வரை) முழுவதும் நிறைவு செய்த முதல் ஆளுநர் என்ற பெருமையையும் பெற்றவர்.

இந்நிலையில், மேற்கு வங்காளத்தின் அல்புர்துவார் பகுதியை சேர்ந்த ஆதிவாசிகள் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான போஸ்டர்களை அந்த பகுதியில் ஒட்டியுள்ளனர்.

இதுபற்றி பா.ஜ.க. முன்னாள் எம்.பி.யான தசரத திர்கி கூறும்போது, இது எங்களுக்கு பெருமையளிக்கும் விசயம். முதன்முறையாக ஆதிவாசி பெண் ஒருவர் ஜனாதிபதி பதவிக்கு நியமனம் செய்யப்பட்டு உள்ளார். பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா மற்றும் பா.ஜ.க. தலைவர் நட்டா ஆகியோர் எங்களை கவுரவப்படுத்தி உள்ளனர் என்று கூறியுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.