ராமர் காலில் விழுந்து வணங்கிய அனுமன்.. மேடையிலேயே மரணம்.. நடிப்பு என நினைத்த பார்வையாளர்கள்.. கண்கலங்க வைத்த காட்சி!

ராமர் காலில் விழுந்து வணங்கிய அனுமன்.. மேடையிலேயே மரணம்.. நடிப்பு என நினைத்த பார்வையாளர்கள்.. கண்கலங்க வைத்த காட்சி!

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு நேற்று பிரதிஷ்டை விழா விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் பலர் பங்கேற்றனர்.

இதனால் நாடு முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அந்த வகையில், அரியானா மாநிலம் பிஹ்வானி நகரில் ராம்லீலா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஹரிஷ் மேதா என்ற நபர் கடவுள் அனுமன் வேடமணிந்திருந்தார். ராம்லீலா நிகழ்ச்சி இறுதியில் கடவுள் ராமர் வேடமணிந்த நபரின் காலை அனுமன் வேடமணிந்திருந்தவர் வணங்குவது போன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், நிகழ்ச்சியின் நடுவே ஹரிஷ் மேதா மேடையில் நின்றுகொண்டிருந்த ராமர் வேடமணிந்த நபரின் கால் அருகே விழுந்தார்.

இதனை, நிகழ்ச்சியின் ஒருபகுதி என நினைத்த அருகில் இருந்தவர்கள் ஹரிஷ் மேதாவை எழுப்பாமல் நாடகத்தை தொடர்ந்தனர். சில நிமிடங்களாக ஹரிஷ் மேதா மேடையில் விழுந்துகிடந்ததால் அதிர்ச்சியடைந்த சிலர் அவரை எழுப்ப முயற்சித்தனர்.

அப்போது, ஹரிஷ் மேதா மயங்கிய நிலையில் இருந்ததால் அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஹரிஷ் மேதாவை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அறிவித்தார்.

ராம்லீலா நிகழ்ச்சியில் நடித்துக்கொண்டிருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவர் நிகழ்ச்சி மேடையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். ஆனால், ஹரிஷ் நிகழ்ச்சியில் நடித்துக்கொண்டிருக்கிறார் என நினைத்து அவரை அருகில் இருந்தவர்கள் கவனிக்காமல் இருந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.