இந்தியாவில் கொரோனா 4வது அலை தொடங்கிவிட்டதா?: ஐசிஎம்ஆர் வெளியிட்ட தகவல்..!!

இந்தியாவில் கொரோனா தொற்று சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் அதுதொடர்பாக ஐசிஎம்ஆர் விளக்கம் அளித்துள்ளது.

2020ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து கொரோனா தொற்று இந்தியாவில் தனது கோர தாண்டவத்தை நிகழ்த்திக் காட்டியது. எனினும், கடந்த சில மாதங்களாக குறைந்த அளவே கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது. உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்தது.
எனினும், கடந்த சில வாரங்களாக தொற்று சற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஐசிஎம்ஆர் கூடுதல் இயக்குனர் சமீரன் பாண்டா கூறுகையில் சில மாவட்டங்களில் மட்டுமே கொரோனா தொற்று சற்று அதிகரித்துள்ளது. நாம் பார்ப்பது தற்காலிகமே தவிர, புதிய வகையான கொரோனா தொற்றின் தொடக்கம் அல்ல.

இவை நாடு முழுவதும் சீரான அளவில் பரவாது. எனினும், 4வது அலை தொடக்கத்திற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று கூறினார்.
கொரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் சில மாநிலங்களில் அதிகரிக்கும் நிலையில், குறைந்த சோதனையே இந்த அதிகரிப்புக்கு காரணம் என்ற சமீரன் அதற்கு உதாரணமாக டெல்லியை காட்டினார்.

டெல்லியில் சோதனையை அதிகரித்த உடன், பாதிப்பு சதவிகிதம் 7லிருந்து 5 ஆக குறைந்துள்ளது என்று சுட்டிக்காட்டினார்.

UpdateNews360 Rajesh

Recent Posts

ஜனநாயகன் படத்தின் சோலியை முடிக்க ரெட் ஜெயண்ட் போட்ட பக்கா  பிளான்? பிரபலம் ஓபன் டாக்…

விஜய்யின் கடைசி திரைப்படம்  தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் 2026 ஆம் ஆண்டு…

41 minutes ago

குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை : தூய்மை பணியாளர்கள் ஆதங்கத்துடன் போராட்டம்!

குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா…

1 hour ago

அப்போலோ மருத்துவமனையில் நடிகர் அஜித் அனுமதி… உடல்நிலைக்கு என்னாச்சு?

நடிகர் அஜித் பத்மபூஷன் விருதுடன் நேற்று சென்னை திரும்பிய நிலையில் இன்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

2 hours ago

இனி குட் பேட் அக்லிக்கு மூடு விழாதான்! மூணே வாரத்துல இப்படி சோலியை முடிச்சிட்டாங்களே?

ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

2 hours ago

படையப்பா ரஜினிக்கு பதில் செந்தில் பாலாஜி… கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய தமிழக அரசு, அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவையில்…

2 hours ago

மறுபடியும் என் படத்துல நயன்தாராவ போடாதீங்க… சூப்பர் ஸ்டாரின் திடீர் கட்டளை : என்ன ஆச்சு?

நயன்தாரா தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். கட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக மார்க்கெட் இறங்காமல் ஏறுமுகமாகவே இருக்கிறார்.…

3 hours ago

This website uses cookies.