மும்பை: மும்பை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.24 கோடி மதிப்பிலான ஹெராயினை கடத்திய தென்னாப்பிரிக்க நாட்டை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மராட்டிய மாநிலத்தின் மும்பையில் உள்ள சத்ரபதி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்திற்கு போதை பொருளை கடத்தி கொண்டு நபர் ஒருவர் வருகிறார் என ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, போதை பொருள் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உடனடியாக சென்று விசாரணையில் ஈடுபட்டனர். இதில், சிவப்பு நிற பை ஒன்றை தள்ளி கொண்டு வந்த தென்ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த நபரை சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர்.
அந்த பையில், 4 போதை பொருள் பொட்டலங்கள் வைக்கப்பட்டு இருந்துள்ளன. அவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர். அதுபற்றிய விசாரணையில், ஹெராயின் வகை போதை பொருள் என தெரிய வந்தது. அதன் எடை 3.980 கிலோ இருந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.24 இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
அந்த நபரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.