ஆந்திர மாநிலம் விஜயவாடா லயோலா கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள லயோலா கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் வகுப்புகளுக்கு செல்ல இன்று அனுமதி மறுக்கப்பட்டது. ஹிஜாபை அகற்றி விட்டு வந்தால் மட்டுமே வகுப்புகளுக்கு செல்ல வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் கூறிவிட்டது.
இதனால் மாணவிகள் கல்லூரி எதிரில் போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து அங்கு வந்த இஸ்லாமியர்கள் கல்லூரி நிர்வாகத்துடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
முதலாவது ஆண்டு முதல் ஹிஜாப் அணிந்து வரும் எங்கள் குழந்தைகளை கல்லூரி நிர்வாகம் திடீரென்று ஹிஜாப் அணிய கூடாது என்று கூறுவது ஏன் என்று எங்களுக்கு புரியவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் கல்லூரி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் ஆந்திரா முழுவதும் மாணவ மாணவிகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில் ஆந்திர மாநிலம் முழுவதும் பரவாமல் தடுக்கும் முயற்சியில் ஆந்திர மாநில கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.