இமாச்சல பிரதேசத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரையில் 60 பேர் உயிரிழந்ததாக அம்மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் மேகவெடிப்பு காரணமாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால், பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பத்ரிநாத், கேதர்நாத் ஆகிய புனித தலங்களுக்கு செல்லும் சாலை நிலச்சரிவு காரணமாக சேதமடைந்துள்ளன. இதனால் ஆன்மீக யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் பெய்த கனமழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு பலர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியது. குறிப்பாக, இமாச்சல பிரதேசம் சிம்லாவில் அடுத்த அடுத்த ஏற்பட்ட நிலசரிவுகளில் இதுவரை 14 உடல்கள் மீட்கப்பட்டதாகவும், பலர் இடுபாடுகளில் சிக்கி இருப்பதாகவும் அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், இமாச்சலில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 60 பேர் உயிரிழந்ததாக அம்மாநில முதலமைச்சர் சுக்வீந்தர் சிங் சுகு தெரிவித்துள்ளார். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் உயிர் பலி உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.