இந்தியாவுக்கு வலிமையான பிரதமர் தேவை என்றும், ஆண்டுக்கு ஒரு பிரதமர் தேவையில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலம் மதுபானி மக்களவை தொகுதியில் நடந்த பாஜக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று பேசினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது :- இண்டியா கூட்டணியில் பிரதமர் பதவிக்கு ஆள் இல்லை. மோடியை 3வது முறையாக பிரதமராக்க நாடு முடிவு செய்து விட்டது. ஆனால், இண்டியா கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர் என்று சொல்ல முடியுமா..?
மேலும் படிக்க: இளைஞர் மீது ஆம்னி பஸ் ஏறி விபத்து… மறித்துப் போன மனிதாபிமான செயலால் பறிபோன உயிர்… அதிர வைக்கும் சிசிடிவி காட்சி
அவர்கள் எப்படியும் ஆட்சியை பிடிக்க போவதில்லை. இருந்தாலும் ஒரு பேச்சுக்கு கேட்கிறேன். மம்தா பானர்ஜி பிரதமர் ஆவாரா? மு.க.ஸ்டாலின் பிரதமர் ஆவாரா? லாலுபிரசாத் பிரதமர் ஆவாரா?அவர்கள் பிரதமர் பதவியை ஆண்டுக்கு ஒருவர் வீதம் தங்களுக்குள் சுழற்சி முறையில் பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.
மீண்டும் கொரோனா போன்ற சூழ்நிலை வந்தால், அவர்களால் நாட்டை காப்பாற்ற முடியுமா? பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டை பாதுகாக்க முடியுமா?இந்தியாவுக்கு வலிமையான பிரதமர் தேவை. ஆண்டுக்கு ஒரு பிரதமர் தேவையில்லை. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவுக்கு தடை விதித்தது சரியான முடிவு, எனக் கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.