ஓரினச்சேர்க்கைக்கு அழைத்தாக தொண்டர் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதமரின் பேரனுக்கு ஜாமீன் கிடைத்தது.
கர்நாடகாவில் உள்ள ஹாசன் மாவட்டம், அரகலகூடுவைச் சேர்ந்த வாலிபர் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில், ம.ஜ.த., – எம்.எல்.சி., சூரஜ் ரேவண்ணா, ஜூன் 23ம் தேதி கைது செய்யப்பட்டார். சி.ஐ.டி., போலீசார், அவரை காவலில் எடுத்து விசாரித்தனர்.
பின், ஜூலை 3ம் தேதி, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் சூரஜ் அடைக்கப்பட்டார். தொடர்ந்து அவரின் ஜாமீன் மனுவுக்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதையடுத்து பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் நேற்று முன்தினம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. நீதிமன்றத்தின் உத்தரவு நகலை, அவரது வழக்கறிஞர்கள், நேற்று காலை சிறை நிர்வாகத்திடம் வழங்கினர்.
இதனால், 22 நாட்கள் சிறை வாசத்துக்கு பின், நேற்று சூரஜ் ரேவண்ணா வெளியே வந்தார். சிறையில் இருந்து வெளியே வந்த பின், அவர் கூறியதாவது:
எனக்கு எதிராகவும், என் குடும்பத்தினருக்கு எதிராகவும் சிலர் சூழ்ச்சி செய்கின்றனர். ஆனால், உண்மையை எப்போதும் மறைக்க முடியாது. என் மீது நடந்த சூழ்ச்சிக்கு யார் காரணம் என்பது குறித்து விரைவில் பகிரங்கமாகும்.
நான் எதையும் பார்த்து, அஞ்சி ஓடிப்போக மாட்டேன். விசாரணை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு தந்துள்ளேன். நாட்டின் நீதி துறை மீது நம்பிக்கை உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.