திமுகவிடம் கேட்கப்பட்ட தொகுதிகள் எத்தனை? பேச்சுவார்த்தைக்காக வந்த காங்., மூத்த தலைவர் பதில்!!
திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீடு தொடர்பான முதல்கட்ட பேச்சுவார்த்தை சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலத்தில் மாலை 3 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலு தலைமையிலான குழு காங்கிரஸ் கமிட்டி குழுவுடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பதை குறித்து இந்த முதற்கட்டமாக பேச்சுவார்த்தையில் முடிவெடுக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. இதில் தேனியை தவிர மற்ற 9 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இன்றைய பேச்சுவார்த்தையில் புதுச்சேரி உட்பட மொத்தம் 12 தொகுதிகள் கேட்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலில் மாநில தலைவர்களுடன் காங்கிரஸ் மூத்த தலைவர் முகுல் வாஸ்னிக் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீடு குழுவை காங்கிரஸ் தலைவர்கள் சந்திக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் டெல்லியில் இருந்து சென்னை வந்த முகுல் வாஸ்னிக் செய்தியாளர்களிடம் பேசும் போது, எவ்வளவு தொகுதி கேட்போம் என்பது பற்றி இப்போது சொல்ல முடியாது, தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறினார்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.