ED சோதனைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களிடம் இருந்து கட்டு கட்டாக பணம் சிக்குவது எப்படி? பிரதமர் மோடி கேள்வி!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31 ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து கடந்த 1 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.இந்த நிலையில் இன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதிலளித்து பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது பிரதமர் மோடி மீண்டும் பாஜக வெல்லும் , 400 தொகுதிகளுக்கு மேல் கட்டாயம் வெற்ற பெறும் என்றும் பாஜக மட்டும் 370 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என பேசினார்.
தொடர்ந்து பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிய பிரதமர், அழிவுப்பாதையை நோக்கி காங்கிரஸ் செல்கிறது. முன்பு காங்கிரஸ் ஆட்சியில் விலைவாசி உயர்வு அதிகமாக இருந்தது. ஆனால் பாஜக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருக்கிறது. கொரோனா காலத்திலும் கூட விலைவாசியை கட்டுக்குள் வைத்துள்ளோம்.
விவசாயிகளுக்கு 5 ஆண்டுகளில் 2.80 லட்சம் கோடி ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களிடம் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்படுவது ஏன்? பாஜக ஆட்சியில் 1 லட்சம் கோடியை அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் 5 ஆயிரம் கோடி மட்டுமே அமலாக்கத்துறையால் கைப்பற்றப்பட்டு இருந்தது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.