தெலுங்கானாவில் 17 வயது பள்ளி மாணவியை காரில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் குறித்து வெளியான சிசிடிவி காட்சியின் அடிப்படையில் ஒருவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஐதராபாத் நகரில் உள்ள ‘பப்’ எனப்படும் மதுபான விடுதியில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் 17 வயது மாணவி, தனது நண்பர்களுடன் கலந்து கொண்டார். விருந்து நிகழ்ச்சி முடிந்ததும் அனைவரும் வீடு திரும்ப முயன்றனர். அப்போது, அந்த 17 வயது சிறுமியை சக நண்பர்கள் வீட்டில் இறக்கி விடுவதாகக் கூறி காரில் வருமாறு அழைத்துள்ளனர்.
அந்த சிறுமியும் நண்பர்கள்தானே என நம்பி அவர்களுடன் காரில் சென்றார். ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் காரை நிறுத்திவிட்டு, மாணவர்கள் ஒவ்வொருவராக அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி, தனக்கு நேர்ந்த கதியை போலீசில் புகாராக அளித்துள்ளார். அதனடிப்படையில் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இதனிடையே, ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் காரை நிறுத்திவிட்டு அந்த மாணவியுடன் மாணவர்கள் செல்லும் சிசிடிவி காட்சி சிக்கியது.
இதன்மூலம், மாணவர்கள் மீதான குற்றம் ஏறத்தாழ உறுதியான நிலையில், 5 பேரை போலீசார் தேடி வந்தனர். இவர்களில் ஒருவன் கைது செய்யப்பட்டார். மேலும், அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரும் மாணவர்கள் என்பதும், அரசியல் செல்வாக்கு மிக்க குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், அதில் ஒரு மாணவன் எம்.எல்.ஏ.,வின் மன் என்பதும் தெரியவந்து உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.