நள்ளிரவு போதை பங்கேற்ற பிரபல நடிகரின் மகள் உள்பட 144 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் போதை விருந்து நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று அதிகாலை 3 மணியளவில் சம்பந்தப்பட்ட ஓட்டலில் போலீசார் திடீர் ரெய்டு நடத்தினர். அப்போது, சுமார் 100க்கும் மேற்பட்டோர் போதைப் பொருட்களை பயன்படுத்திக் கொண்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, போதை பார்ட்டியில் பங்கேற்று போதை மருந்துகளை உட்கொண்டிருந்ததாக 144 பேரையும் போலீசார் சுற்றி வளைத்தனர். அதில், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் என்று தமிழ் படத்தில் நடித்துள்ள நடிகை நிஹாரிகாவும் ஒருவராவார்.
இவர், தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சீரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகள் ஆவார்.
மேலும், பின்னணி பாடகரும், தெலுங்கு பிக் பாஸ் டைட்டில் வின்னரும் ராகுல், முன்னாள் டிஜிபியின் மகள், தெலுங்கு தேசம் எம்பியின் மகன் உட்பட ஏராளமான பிரபலங்கள் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளனர்.
இதுகுறித்து ஹைதராபாத் போலீஸார் கூறுகையில், “ஐதராபாத் நட்சத்திர ஓட்டலில் தனிப்படை நடத்திய சோதனையில் பலர் சிக்கியுள்ளனர். இதில் 35 பேர் பெண்கள்,” என்று தெரிவித்தனர்.
தெலுங்கு பிரபலங்களில் முக்கிய புள்ளிகளின் வாரிசுகள் போதை பொருட்கள் பயன்படுத்திய வழக்கில் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
வேலூர்மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியில் பேருந்து நிறுத்தம்அருகில் அமுதம் ஓட்டல் கடை உள்ளது. இதன் உரிமையாளர் சீனிவாசன் அவருடைய…
ஸ்ட்ரெஸ் பஸ்டர் தமிழக சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி திகழ்ந்து வருகிறது. இதனை Stress…
விஜய்யின் கடைசி திரைப்படம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் 2026 ஆம் ஆண்டு…
குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா…
நடிகர் அஜித் பத்மபூஷன் விருதுடன் நேற்று சென்னை திரும்பிய நிலையில் இன்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
This website uses cookies.