நாங்கள் ஜெயித்தால் 200 யூனிட் மின்சாரம் இலவசம் : அரசியல் கட்சிகளை மிரள வைத்த காங்கிரஸ் கட்சியின் அறிவிப்பு!!

வரும் தேர்தலில் நாங்கள் ஜெயித்தால் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி ஆளும் பா.ஜ.க உள்பட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தேர்தலுக்கு தயாராகி வருகிறார்கள்.

ஆளும் பா.ஜ.க ஜனசங்கல்ப யாத்திரை என்ற பெயரில் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது.

அதேபோல் ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி பஞ்சரத்னா யாத்திரையை தொடங்கி நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி ‘ஜன த்வனி’ (மக்கள் குரல்) என்ற பெயரில் பஸ் யாத்திரை பயணத்தை நேற்று தொடங்கியுள்ளது. பெலகாவியில் இருந்து இந்த பயணம் நேற்று தொடங்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, மாநில தலைவர் டி.கே. சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்ளிட்ட தலைவர்கள் அங்குள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து பயணத்தை தொடங்கியுள்ளனர்.

முதல் நாளில் சிக்கோடியில் நடைபெற்ற கட்சியின் பொதுக்கூட்டத்தில் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் டி.கே.சிவக்குமார் கலந்து கொண்டு பேசும்போது, இன்று வரலாற்று சிறப்பு மிக்க நாள். மக்களின் பிரச்சினைகள், வலிகள், வேதனைகள், கருத்துகளை அறியும் பொருட்டு நாங்கள் இந்த மக்கள் குரல் பயணத்தை தொடங்கியுள்ளோம்.

உங்களுக்கு பலம் கொடுக்கவும், உங்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றவும் நாங்கள் இங்கு வந்துள்ளோம். மக்களின் கஷ்டங்களை தீர்ப்பதே இந்த பயணத்தின் நோக்கம் ஆகும்.

1924-ம் ஆண்டு பெலகாவியில் நடைபெற்ற மாநாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு மகாத்மா காந்தி தலைமை ஏற்று சுதந்திர போராட்டத்தை நடத்தினார்.

நாங்கள் அதே இடத்தில் இருந்து தான் இந்த பஸ் பயணத்தை தொடங்கியுள்ளோம். நாங்கள் போருக்கு புறப்பட்டுள்ளோம். காந்தியின் கிணற்று நீரை எடுத்து அதை நிலத்தில் ஊற்றி துடைத்துவிட்டு, இந்த அரசு துடைத்தெறியப்பட வேண்டும் என்று உறுதிமொழி ஏற்று வந்துள்ளோம்.

இந்த பயணத்தின்போது 5 முக்கியமான வாக்குறுதிகளை அறிவிக்க முடிவு செய்துள்ளோம். அதில் முதல் வாக்குறுதி என்னவென்றால், கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் வீடுகளுக்கு மாதந்தோறும் தலா 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். நாங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுவோம். சொன்னபடி நடந்து கொள்வோம். கடந்த காலங்களில் நாங்கள் அவ்வாறு நடந்து கொண்டுள்ளோம் என கூறியுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

6 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

8 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

8 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

9 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

10 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

10 hours ago

This website uses cookies.