திமுகவுக்கு ட்விஸ்ட் வைக்கும் இண்டியா கூட்டணி..புதிய கட்சி வருகை : கிடைச்சது சிக்னல்?!

திமுகவுக்கு ட்விஸ்ட் வைக்கும் இண்டியா கூட்டணி..புதிய கட்சி வருகை : கிடைச்சது சிக்னல்?!

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அகில இந்திய செயற்குழு கூட்டம் மைசூருவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு சமூக – பொருளாதார பிரச்சினைகள் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் பற்றி விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அகில இந்திய தலைவர் எம்.கே.பைஸி இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில் 5 வதாக “2024 மக்களவைத் தேர்தலில் அனைத்து மக்களின் ஒற்றுமை ஜனநாயகத்தைப் பாதுகாக்கும்” என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில் எஸ்டிபிஐ கட்சி குறிப்பிட்டு உள்ளதாவது, “எதேச்சதிகார மற்றும் தீவிர வலதுசாரி பாசிச ஆட்சியின் கீழ் நமது தேசத்தின் அடித்தளமான ஜனநாயகமும், மதச்சார்பின்மையும் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. ஆட்சியின் ஊழல் மற்றும் விரோதக் கொள்கைகளுக்கு எதிராகப் பேசியதற்காக எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்படும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளனர்.

நேர்மையாகப் பேசும், எழுதும் ஊடகங்கள் ஏஜென்சிகளால் ரெய்டு செய்யப்படுகின்றன.பத்திரிகையாளர்கள் சிறைக் கம்பிகளுக்கு பின்னால் தள்ளப்படுகிறார்கள். ஆளும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மிகவும் கீழ்த்தரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர், அவர்கள் பாராளுமன்றத்திலும் வெளியேயும் இழிவான, பாரபட்சமான மற்றும் இனவாத மொழியைப் பயன்படுத்துவதில் வெட்கப்படுவதில்லை.

கார்ப்பரேட் நிறுவனங்களின் ரூ 2.69 லட்சம் கோடி வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் ஏழைகள் மற்றும் விவசாயிகள் வேலையின்மை, வங்கி பொறுப்புகள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக தற்கொலை செய்து கொள்கின்றனர்.

தேர்தல் பிரச்சாரத்தில் ஆளும் கட்சியின் நிகழ்ச்சி நிரல் வளர்ச்சி அல்ல, மாறாக வகுப்புவாத வெறுப்புதான். ஆகவே, வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் வகுப்புவாத சக்திகள் மீண்டும் ஆட்சியைப் பிடிக்காமல் தடுக்க, அனைத்து சமூகங்கள், மக்கள் மற்றும் சிறிய அல்லது பெரிய கட்சிகளை உள்ளடக்கிய பரந்த அடிப்படையிலான கூட்டணி ஒன்றுபட வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.” என்று குறிப்பிட்டு உள்ளது.

தற்போது 2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ‘இந்தியா’ என்ற பெயரில் காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஆர்ஜேடி, ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி, கொமதேக உள்ளிட்டவை இடம்பெற்று உள்ளன. இதில் இஸ்லாமிய கட்சிகளை பொறுத்தவரை மமக தமிழ்நாடு அளவில் இயங்கக்கூடியது.

முஸ்லிம் லீ, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வலுவாக உள்ளது. இந்த நிலையில் தேசிய அளவில் அனைத்து மாநிலங்களிலும் கிளை பரப்பி இருக்கும் எஸ்டிபிஐ கட்சி சிறிய அல்லது பெரிய கட்சிகளை உள்ளடக்கிய பரந்த அடிப்படையிலான கூட்டணி ஒன்றுபட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி இருப்பது 2024 மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் இணைவதற்கான விருப்பமா என்ற கேள்வி எழுந்து உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

6 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

6 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

6 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

7 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

7 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

8 hours ago

This website uses cookies.