திருவனந்தபுரம்: நடிகை பாலியல் தொல்லை வழக்கில் விசாரணை அதிகாரிகளை மிரட்டிய விவகாரத்தில் நடிகர் திலீப் மீதான வழக்கை ரத்து செய்ய கேரள உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
நடிகையை கடத்தில் பாலியல் தொல்லை அளித்த வழக்கில் விசாரணை அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி மலையாள நடிகர் திலீப் தாக்கல் செய்த மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
நடிகர் திலீப் உள்பட 6 பேர் மீது சைபர் க்ரைம் போலீஸ் பதிவு செய்த வழக்கை தொடர்ந்து விசாரிக்கவும் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 2017ல் கேரள நடிகையை கடத்தி வன்கொடுமை செய்த வழக்கை விசாரிக்கும் அதிகாரியை மிரட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
விசாரணை அதிகாரியை கொல்ல திட்டமிட்டதாக நடிகர் திலீப் உள்பட 6 பேர் மீது ஜனவரி 9ல் வழக்கு பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது. சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டுமென்ற நடிகர் திலீப் கோரிக்கையும் நிராகரித்தது. நடிகை துன்புறுத்தப்பட்ட வழக்கில் விசாரணை அதிகாரிகளை கொல்ல சதி நடந்தது குறித்து தொடர்ந்து விசாரிக்கவும் அனுமதி வழங்கப்பட்டது.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.